<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229</id><updated>2012-01-23T09:08:08.469-08:00</updated><title type='text'>நாளை விடியும்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>26</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-4854384643019302242</id><published>2011-03-21T10:52:00.000-07:00</published><updated>2011-03-21T11:02:36.766-07:00</updated><title type='text'>பெண்கள் தினம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பெண்ணே!&lt;br /&gt;&lt;br /&gt;நீ அழகி என்றால்&lt;br /&gt;வெட்கி நின்றாய்!&lt;br /&gt;நீ அன்பு என்றால்&lt;br /&gt;உருகி நின்றாய்!&lt;br /&gt;நீ கருணை என்றால்&lt;br /&gt;இறங்கி நின்றாய்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இப்படிப்பல!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவர் சொல்கேட்டு&lt;br /&gt;அதுவாகவே மாறி&lt;br /&gt;அடுத்தது என்னவென்று&lt;br /&gt;அகப்படாமல் போனதால்தான்&lt;br /&gt;பெண்ணே நீ&lt;br /&gt;&lt;br /&gt;அன்றுமுதல் இன்றுவரை&lt;br /&gt;அடிமைப்பட்டே கிடக்கிறாய்!&lt;br /&gt;சுயமாய்ச் செயல்பட மறுக்கிறாய்!&lt;br /&gt;சுலபமாய்ப் பிறரைப் பழிக்கின்றாய்!&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு நீயே யாரென்று&lt;br /&gt;உணருகின்ற நாள்வரை&lt;br /&gt;உயர்வு என்பதை உன்வாழ்வில்&lt;br /&gt;உணராமல் போவாயே!&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணே!&lt;br /&gt;&lt;br /&gt;வெட்கம் என்பது தவறல்ல&lt;br /&gt;அடக்கம் என்பதும் தவறல்ல!&lt;br /&gt;அன்பு என்பது தவறல்ல&lt;br /&gt;கருணை என்பதும் தவறல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;உனக்காய் உன்னுள் ஊறும்&lt;br /&gt;உணர்வுதன்னை மதித்திடு&lt;br /&gt;உற்றோர் மற்றோர் பெருமைக்கு&lt;br /&gt;உணர்வை மாற்ற மறுத்திடு!&lt;br /&gt;&lt;br /&gt;ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான்&lt;br /&gt;அகில வாழ்க்கை புரிந்திடு!&lt;br /&gt;ஆணோ பெண்ணோ தனித்திருப்பின்&lt;br /&gt;ஆக்கம் ஏதுமில்லை விளங்கிடு!&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுள்காலம் முழுமையும்&lt;br /&gt;அடுத்தவர் உயர்ந்திடத் தோள்கொடு!&lt;br /&gt;அனு முதல் அண்டம் வரை&lt;br /&gt;அனைத்தும் உன்வசப்படும் நம்பிடு!&lt;br /&gt;&lt;br /&gt;மங்கையர் தினமாம் இந்நாளை&lt;br /&gt;மாட்டுப் பொங்கலாய் நினையாமல்&lt;br /&gt;மாற்றம் காணப் புவியதனில்&lt;br /&gt;மனமேற் கொண்டு உழைத்திடு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-w-5r5XWmWho/TYeSo26PMlI/AAAAAAAAADY/6WOM7cqetuQ/s1600/vaani.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" r6="true" src="https://lh6.googleusercontent.com/-w-5r5XWmWho/TYeSo26PMlI/AAAAAAAAADY/6WOM7cqetuQ/s320/vaani.bmp" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;வாணி&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;, சென்னை (உயிர்ப்பூ நூலிலிருந்து.....)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-4854384643019302242?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/4854384643019302242/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=4854384643019302242' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/4854384643019302242'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/4854384643019302242'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2011/03/blog-post.html' title='பெண்கள் தினம்!'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh6.googleusercontent.com/-w-5r5XWmWho/TYeSo26PMlI/AAAAAAAAADY/6WOM7cqetuQ/s72-c/vaani.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-3620427898421390516</id><published>2011-02-16T07:07:00.000-08:00</published><updated>2011-02-16T07:07:05.796-08:00</updated><title type='text'>சாதிமறுப்பு பார்ப்பனப் புரோகிதமறுப்புத் திருமணம்</title><content type='html'>பெரியாரியலாளரும், வனத்துறையில் பணியாற்றுபவருமான தோழர் இல. கோவிந்தசாமி - செயசிறீ இணையரின் மகள் செ.கோ. விடுதலைச்செல்விக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;       திருச்சிராப்பள்ளி, எம்.ஏ.எம். பொறியியல் &amp; தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் திருமிகு முனைவர் கி.குமார் - ச.விசயலெட்சுமி இணையரின் மகன் வி.கு.விமல்குமாருக்கும் &lt;b&gt;சாதிமறுப்பு, புரோகிதமறுப்புத் திருமணம் &lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;16.02.2011 அன்று திருச்சிராப்பள்ளி, உய்யக்கொண்டான்திருமலை, யோகலெட்சுமி திருமணமணடபத்தில் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர்                    இரா. இளங்குமரனார் தலைமையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;b&gt;பார்ப்பனப் புரோகிதர்களை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில் தோழர்கள் மஞ்சை வசந்தன், தா.பெ.அ. தேன்மொழி, வி.சி.வில்வம் ஆகியோர் எழுதிய &lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரைகள் அடங்கிய நூல் (தன்மதிப்புத் திருமணம் ஏன்?) விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திருமணவிழாவின் சிறப்பு என்பது, சாதிமறுப்புத் திருமணம் என்பதும், கலந்து கொண்டவர்களுக்கு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்பதும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரியலாளர்களும், முற்போக்காளர்களும் பெயரளவுக்கு மட்டுமே கொள்கைபேசிவிட்டு, மேடையில் மட்டுமே முழங்கிக் கொண்டிருக்காமல் இதுபோன்ற முன்மாதிரிச்செயல்களைச் செய்ய முன்வருவது நல்லது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-3620427898421390516?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/3620427898421390516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=3620427898421390516' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/3620427898421390516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/3620427898421390516'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2011/02/blog-post.html' title='சாதிமறுப்பு பார்ப்பனப் புரோகிதமறுப்புத் திருமணம்'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-290576712770349195</id><published>2010-11-28T06:41:00.000-08:00</published><updated>2010-12-16T09:38:11.479-08:00</updated><title type='text'>நல்ல நேரம் தமிழர்வாழ்வில் ஏற்படுத்தும் நெருக்கடியும் சீரழிவும் - குமரன்தாசு</title><content type='html'>&lt;b&gt; "நல்லநேரம், இராகுகாலம், எமகண்டம் என்று பார்க்கிறார்களே ‡ இவர்களுக்குக் கோர்ட்டில் ஒரு கேஸ் விசாரணை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கு நல்ல கொழுத்த இராகுகாலம் என்று சொல்லப்படும் நேரத்தில் அவன் இராமசாமி! இராமசாமி! என்று கூப்பிட்டால், இவன் இப்போது இராகுகாலம் நான் வரமாட்டேன் என்று கூறுவானா? துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு குடுகுடு என்று ஓடிப்போய் வந்தேன் என்று தானே கூறுவான்? அப்பொழுது எங்கே போயிற்று இராகுகாலம்?"&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--தந்தை பெரியார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் தினசரி பேருந்தில் பயணம் செய்யும் விதமான பணியில் இருப்பதால் ஓர் ஆண்டின் 365 நாட்களும் பல்வேறு விதமான சூழலில் பயணம் செய்திருக்கிறேன். மிகவும் நெருக்கியடித்துக் கொண்டு ஒரு காலின் மீது மற்றொரு காலை வைத்துக் கொண்டு நிற்பதற்குக்கூட இடமில்லாதவாறும். அதே பேருந்து வழித்தடத்தில் ஓட்டுநர் நடத்துநர் மற்றும் நான் என மூவர் மட்டுமேயும் அமர்ந்து பேருந்து காத்தாடவும் பயணம் செய்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்தத் தலைகீழான நிலை? ஒரு நாள் மிகமோசமான இடநெருக்கடி; மற்றொரு நாள் ஆளேயில்லாத வீண் பயணம். பொதுவாக நகர்ப்புறங்களில் பணிக்குச் செல்பவர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் என காலை 8 மணியிலிருந்து 10 மணிவரையும், அதேபோல் மாலை பணிமுடிந்து வீடு திரும்பும் 5மணியிலிருந்து 7மணி வரையும் பேருந்தில் நெரிசல் மிகுந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல கிராமப்புற வழித்தடத்தில் விவசாயக் காலத்தில் களைஎடுக்க, அறுப்புக்கு என்று உழைக்கும் பெண்கள், கூட்டம் கூட்டமாக ஏறும் போது பேருந்தில் நெரிசல் மிகுவதையும் நாம்புரிந்து கொள்ள முடியும்.ஆனால் ஓர் ஆண்டின் குறிப்பிட்ட சில நாட்களான, தை, மாசி, பங்குனி, ஆனி, ஆவணி போன்ற மாதங்களின் முகூர்த்த நாட்களில் மட்டும் நாம் மேலே கூறிய‡ நிற்பதற்கு இடமில்லாத நெரிசலும் பிற நாட்களில் அதுவும் ஆடி, புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் முற்றிலும் கூட்டமில்லாத வெறிச்சோடிய நிலையையும் பேருந்தில் நாம் காணும்போது நமது தமிழ் மக்களிடம் வேரூன்றியுள்ள ஒரு நம்பிக்கை நம் நாட்டின் ஓரு துறை (போக்குவரத்துத்துறை) யையே எவ்வாறு பாதிக்கிறது என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து பேருந்துப்பயணம் செய்பவர் பற்றிய ஒரு புள்ளிவிபரத்தை எடுத்துப் பார்த்தால் ஆண்களைவிடப் பெண்கள் குறைவாகவே பயணம் செய்வது புலனாகும். தென்மாவட்டங்களில் சராசரியாக ஒரு பேருந்தில் 50 ஆண்களுக்கு 10 பெண்கள் என்ற விகிதத்திலேயே பயணம் செய்கின்றனர். அதுவும் பெண்களின் பேருந்துப் பயணம் பெரும்பாலும் பகல் பொழுதுகளிலேயே நிகழ்கிறது. மாலை 6 மணிக்குமேல் பயணம் செய்வது மிகக்குறைவு. இரவு 9மணிக்கு மேல் முற்றிலும் இல்லை என்றே கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குமாறாக ஆண்களைவிடப் பெண்கள் அல்லது ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் பயணம் செய்யும் நாட்கள் இந்த முகூர்த்த நாட்களேயாகும். அதுவும் நிறைய நகைகளையும், பட்டுப்புடவையையும் அணிந்து கொண்டு பங்குனி, சித்திரை மாத வெயிலில் பெண்கள் பேருந்தில்படும் தொல்லை மிக அருவருப்பானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான நேரத்திலேயே திருடு, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள், சேட்டைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் முகூர்த்த நாட்கள், திருவிழாக்காலம் போன்ற இந்துமதம் சார்ந்த நாட்களில்தான் பெண்கள் அதிகமாகப் பயணம் செய்கின்றனர். ஆனால் பணி, உழைப்பு, பொருளீட்டல் போன்ற காரணங்களுக்காக ஆண்களைப்போல் வீட்டைவிட்டு வெளியேவந்து பயணம் செய்வது மிகக்குறைவாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் பெண்கள் திருமணம், திருவிழா, கோவில், குளம் என இந்துமதப்பண்பாடு சார்ந்து மட்டுமே வீட்டை விட்டு வெளிவருவதும் பயணம் செய்வதும் அதிகமாக இருக்கிறது என்ற நிலை. தமிழர் வாழ்வுமுறை காலத்தால் எந்த அளவு மாற்றம் அடைந்துள்ளது என்பது சிந்திக்கத்தக்கது.&lt;br /&gt;பயணம் என்பதும் ஒருவகை நுகர்வுதான்; எனவே மற்ற எல்லாவித நுகர்வுகளிலும் பெண்கள் தமக்குரிய பங்கை, சரிபாதியை ( 50 % ) நுகரமுடியாமல் இருப்பதைப்போலவே பயணத்திலும் மிகக்குறைவாகவே ‡ அதுவும் மதம்சார்ந்தும், ஆண்சார்ந்தும், கேளிக்கை சார்ந்தும் பயணிக்கிறார்களேயன்றி தன்மதிப்புசார்ந்த பயணம் மிகக்குறைவே. இதில் கிராமம், நகரம், மாநகரம் என்ற வெளிக்கேற்ற மாறுபாடுகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டுரை இத்தகைய ஆண் பெண் ஏற்றத்தாழ்வு பற்றியதல்ல. மாறாக கால , நேரம் ( நல்ல நேரம்‡ கெட்ட நேரம்) தமிழர் வாழ்வின் ஒவ்வொரு கூறுகளிலும் புரியும் வினை பற்றியதாகும். ஆம் இந்துக்கள் என்போரின் ஒவ்வொரு செயலுமே காலம், நேரம், நாள், நட்சத்திரம் பார்த்தே மேற்கொள்ளப்படுகிறது. அதாவது பார்ப்பனியம்/ இந்துமதம் வரையறுத்துத்தந்த காலவெளிகளிலேயே இந்துக்கள் வாழ்வு இயங்குகிறது எனலாம். அதன் ஒரு உதாரணம்தான் நான் மேலேகூறிய பேருந்துப்பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்துப்பயணம் மட்டுமல்ல, இந்துக்கள் தங்கள் மயிரைச் சிரைத்துக் கொள்வதைக்கூட கிழமை பார்த்தே மேற்கொள்கின்றனர். வெள்ளியும் செவ்வாயும் முடிவெட்டிக் கொள்வதில்லை. அதே போல் இந்துக்கள் வெள்ளியும் செவ்வாயும் அசைவம் உண்பதில்லை. நம்மைப் ¼ ப V ன் ற வ ர்க ள் முடிவெட்டிக் கொள்ளவும்,இறைச்சி வாங்கவும் இந்த வெள்ளி செவ்வாயைப் பயன்படுத்தினால் சிரமம் இருக்காது. இன்று இந்துக்கள் விரதம் இருக்கும் நாட்கள் புதிதுபுதிதாக முளைத்து வருகிறது. சிலர் சனிக்கிழமையைத் தேர்வுசெய்து அன்று விரதம் என்கிறார்கள், சிலர் திங்கள் கிழமையை விரதநாளாக முடிவு செய்து அன்று ஒருநாள் அசைவம் உண்பதில்லை எனக் கராறாக மறுத்து விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முடிவுகளுக்குப் பின்னே யாரோ ஒரு சோதிடரின் கூற்றும், அசைவம் என்பது தீட்டு; சைவம் என்பது உயர்வு என்ற கருத்தும் மறைந்திருக்கிறது. இவ்வாறான நாள் கிழமை , நல்ல நேரம் ‡ கெட்ட நேரம் என்ற மனநோய் முற்றி சிலர் தங்கள் வீட்டுப் பெண்களின் குழந்தைப் பிறப்பை நல்லநேரத்தில் அமைய வேண்டும் என்பதற்காகக் குறித்த நேரத்தில் அறுவை செய்து குழந்தையை வெளியே எடுக்கும்படி செய்யும் அளவிற்குத் தீவிரமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக்கள் பிறப்பிற்கு நேரம் பார்ப்பதைப் போலவே இறப்பிற்கும் நேரம் பார்ப்பதும், பிணத்தையும் நேரம் பார்த்து எடுப்பதும் வழக்கமாகும். மேலும் ஒரு இந்து வெள்ளிக்கிழமை இறந்து அடக்கம் செய்யப்படுவாரேயானால் அவருக்காக இவர்கள் மேற்கொள்ளும் இரண்டாம்நாள் காரியத்தை (பால் ஊற்றுவது) சனிக்கிழமை செய்வதில்லை; ஒரு நாள் விட்டு ஞாயிற்றுக்கிழமையே செய்வர். அதேபோல் ஒரு இந்துவை சனிக்கிழமை அடக்கம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால் சனிப்பிணம் தனிப்போகாது என்ற அச்சத்தின் காரணமாக ஒரு கோழிக்குஞ்சை பிணத்தின் கால்ப்பகுதியில் கட்டி மயாணத்திற்கு எடுத்துச் செல்வதும் வழக்கமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒரு நகைப்பிற்குரிய நம்பிக்கையும் இந்துக்கள் மத்தியில் உண்டு. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ( குளிகை ) இறந்துவிடும் இந்துவின் சடலத்தை வீட்டுக்கு வெளியே எடுத்துச்செல்ல வீட்டு வாயிலைப்பயன்படுத்தக்கூடாது என்பதும் வீட்டுச்சுவரை உடைத்து புதிய வழியை உருவாக்கி, அதன் வழியே பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதியும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண மனிதர்களின் நிலை இது என்றால் நாட்டின் உயர்கல்வி கற்ற அறிஞர்கள் , விஞ்ஞானிகளின் நிலையோ இதைவிடக் கேவலமாக இருக்கிறது. இவர்கள் புதிதாக வடிவமைத்து விண்ணில் ஏவும் செயற்கைக்கோளை நேரம் (இராகுகாலம், எமகண்டம்) பார்த்து ஏவுவது என்பது, ஒரு இந்து எவ்வளவுதான் உயர்ந்த கல்விகற்று இருந்தாலும்கூட அவனால் இந்து மதப்பண்பாட்டையும், நம்பிக்கைகளையும் மீற இயலாது என்பதையே காட்டுகிறது. தனி மனிதர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த அரசு, அதிகார வர்க்கம் முழுதுமே இவ்வாறுதான் இருக்கிறது. ஒரு மதச்சார்பற்ற அரசின் திட்டங்கள் துவக்க விழாக்கள், அடிக்கல் நாட்டல்கள் என அனைத்துமே இந்துப்பார்ப்பனிய வழிகாட்டலின்படி இங்கு நேரங்காலம் பார்த்தே மேற்கொள்ளப்படுவது மதச்சார்பின்மை என்பதைக் கேலிக்குரிய ஒன்றாக மாற்றிவிடுகிறது. தமிழர் வாழ்வு விவசாய உற்பத்தியை முழுமையாகச் சார்ந்து இயங்கிய காலத்தில் ஆடிவிதைப்பு துவங்கி தைஅறுவடை முடியும்வரை வேறு எந்த நிகழ்வுகளுக்கும் அதாவது கல்யாணம், காதுகுத்து போன்ற விழாக்களுக்கு இடம் கொடுப்பதில்லை. தைக்குப்பிறகே அதாவது விவசாயப்பணிகள் முடிந்து நெல் வீடுவந்து சேர்ந்த பிறகே தம்வாழ்வின் பிறதேவைகளை‡மறு உற்பத்தி , பண்பாட்டுத் தேவைகளை  நிறைவு செய்ய முயல்வர். இதில் நியாயமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இயற்கைச் சூழல் முற்றிலும் குழம்பிப் போய்விட்ட இன்றைய நிலையில் அதைச்சார்ந்து விவசாய உற்பத்தியும் மாறியுள்ள நிலையில் மேலும் குறுகிய காலப்பயிர் போன்றவைகள் நடப்பிற்கு வந்துவிட்ட நிலையிலும் ‡ மேலும் நகர்ப்புறத்தில் விவசாய உற்பத்தியைச் சாராத நிலையில் வாழும் மக்களும் கடந்த காலத்தைப் போலவே ஆடி, மார்கழி , புரட்டாசி போன்ற மாதங்களைப் பீடைமாதம் என்று புறந்தள்ளுவதும் வைகாசி, ஆனி, ஆவணி, போன்ற மாதங்களின் குறிப்பிட்ட ஒரு சில நாள்களை மட்டுமே அதாவது 365 நாள்களில் வெறும் 50 நாள்களை மட்டுமே நல்ல நாள்களாகக் கருதி அந்நாட்களில் அடித்துப் பிடித்து தம் இல்ல விழாக்களை நடத்துவதும் அறிவுக்கு ஒவ்வாத நடைமுறையாக இருக்கிறது என்பதோடு பல்வேறு நெருக்கடிகளையும் கொண்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக அய்ப்பசி, கார்த்திகை போன்ற அடைமழைக் காலத்தில் அதிகாலை 6 மணிக்கு நல்ல நேரம் என்று கருதி திருமணத்தை நடத்துவதை நாம் காண்கிறோம். காலைக்கடனை முடிக்க கழிவறையைத் தேடும் நேரத்தில் மழைக்கும் புயலுக்கும் நடுவே திருமணத்தை நடத்தி முடித்தே தீரவேண்டிய கட்டாயம் என்ன வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக்கள் பெரும்பான்மையாக திருமணத்தை நடத்தும் ஆவணி மாத முகூர்த்த (வளர்பிறை) நாளில்தான் தமிழகம் முழுதும் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் திருமண மண்டபங்கள் கிடைப்பதில்லை; காய்கறித் தட்டுப்பாடு, வாழைஇலை, பழங்கள், பூமாலை என அனைத்திற்கும் தட்டுப்பாடு; அதனால் விலையேற்றம்; பேருந்துகளில் கூட்ட நெரிசல் என்று ஒரு செயற்கையான நெருக்கடியை இந்த நல்ல நாள் ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;இந்துத் திருமணமுறை தாலி , பார்ப்பனச்சடங்கு, வரதட்சணை போன்ற வற்றை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது வேறு பிரச்சனை. ஆனால் தமிழ்ச்சமூகத்தில் பெரும்பான்மையோர் இவ்வாறு திருமணத்தை மேற்கொள்வதால் ஏற்படும் நெருக்கடியை எல்லோருமே சந்திக்க வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்திருமண முறையை இன்று பார்ப்பனரல்லாத அனைத்துச் சாதியினரும் ஆதிக்கச் சாதியினர் முதல் அருந்ததியர் வரை கடைப்பிடிக்கின்றனர். பார்ப்பனர்கள் இந்துக்கடவுள்களுக்குத் திருமணம் நடைபெறும் (ஆடித் திருக்கல்யாணம் ) ஆடி மாதத்தில் தங்களது இல்லத் திருமணங்களை நடத்திக் கொள்வர். ஆடியும் மார்கழியும் அவர்களுக்கு மட்டும் நல்ல மாதங்கள். இத்தகையநிலையில் இந்த நல்ல (முகூர்த்த) நாள் என்ற ஏற்பாட்டால் தொழில் உற்பத்தித் துறையில், வணிகத்துறையில் ஏற்படுகின்ற நெருக்கடிகள் பற்றியும் நாம்சிந்திக்க வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு தமிழ்ச்சமூகத்தில் (சிறுதொழில்) பொருள் உற்பத்தி என்பது மக்களுடைய அன்றாடப் பயன்பாட்டிற்கு என்று மட்டுமல்லாமல் பிரதானமாக பண்பாடு சார்ந்ததாகவும் இருக்கிறது. அதாவது தமிழர்களின் அன்றாடத்தேவை சார்ந்த கொள்முதலை மட்டும் நம்பி இங்கு பொருள் உற்பத்தி அமையுமேயானால் அது ஒரே சீராக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக குறிப்பிட்ட மதப்பண்பாடு சார்ந்த நாட்களை மய்யப்படுத்திய நுகர்வு மேலோங்கி இருப்பதால், ஆண்டின் சில நாட்களை மய்யப்படுத்திய நுகர்வாக இருப்பதால் தொழில், வணிகம் ஒரு நெருக்கடியைச் சந்திக்க வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு இந்துக்கள் தம் இல்லத்திருமணத்தை முன்னிட்டு கொள்முதல் செய்யும் மளிகைப் பொருட்கள், ஆடை ஆபரணங்கள் மற்றும் சீர்சாமான்கள் எனப்படும் கட்டில், மெத்தை, கிரைண்டர், பித்தளை, சில்வர் பாத்திரங்கள் போன்றவற்றில் கிரைண்டர் அல்லது ஸ்டீல்பீரோ என்பனவற்றின் உற்பத்தியைப்பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்நாளில் ஆட்டுக்கல் , அம்மி வாங்கியவர்கள் காலமாறுதலுக்கு ஏற்ப இன்று கிரைண்டர் , மிக்ஸி வாங்குகிறார்கள். இந்தக்கிரைண்டர் எனப்படும் மாவு அரைக்கும் இயந்திரம் நகர்ப்புறங்களில் எல்லோருக்கும் அவசியமான ஒன்றாக மாறிப்போயிருக்கிறது. எனவே வீட்டுக்கு ஒரு கிரைண்டர் அவசியம் எனக்கொள்ளலாம். எனவே கிரைண்டர் இல்லாத நடுத்தர வர்க்கத்தினர், அடித்தட்டு மக்கள் கையில் கூடுதலாக பணம் புழங்கும் நேரத்தில் கிரைண்டர் வாங்கலாம். இன்றைக்குப் பெரும்பாலும் அரசு போனஸ் வழங்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த கிரைண்டர் அல்லது பிற பொருட்களின் விற்பனை கூடுதலாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்றைக்கு இந்தப் பொருட்களின் விற்பனை என்பது கல்யாண சீசன் என்று சொல்லக்கூடிய ஆனி, ஆவணி, வைகாசி என்ற மாதங்களின் முகூர்த்த நாட்களை மய்யப்படுத்தியதாகவே இருக்கிறது. ஏனென்றால் இவை பயன்பாட்டிற்காக வாங்கப்படுவதில்லை. மாறாக, சீர் கொடுப்பதற்காகவே வாங்கப்படுகின்றன. இவ்வாறு சீருக்காக வாங்கப்படும் பொருட்களில் பெரும்பாலானவை மூட்டையாகக் கட்டப்பட்டு ஒவ்வொரு நடுத்தரவர்க்கத்து இந்துவின் வீட்டின் மூலையிலும் தூங்கிக் கொண்டிருப்பது தனிக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக இப்பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு தொழில் பட்டறைகள் முகூர்த்த காலத்தில் அதிகமாக இவற்றை உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும். இந்நிலைக்கு நேர் எதிராக முகூர்த்தமில்லாத ஆடி, மார்கழி, புரட்டாசி போன்ற மாதங்களிலும் பிற மாதங்களின் முகூர்த்தமற்ற காலத்திலும் உற்பத்தியைக் குறைக்க வேண்டும். ஒரு தொழில் நிறுவனத்திற்கு இது எவ்வாறு சாத்தியம்? மேலும் முகூர்த்த காலத்தில் தேவையை ஒட்டி கூடுதலாகத் தொழிலாளரைச் சேர்த்தால் பிற முகூர்த்தமற்ற நாட்களில் அவர்களுக்கு வேலை கொடுக்கவும் சம்பளம் கொடுக்கவும் முடியுமா ? அதே போல்தான் இப்பொருட்களை வாங்கி விற்கும் வணிகர்களுக்கும் , கடைகளுக்கும் நெருக்கடி. திருமணசீசனில் ஒரேநாளில் சமாளிக்க முடியாதவாறு வாடிக்கையாளர்கள் வந்து குவிவதும் அவர்களைக் கவனிப்பதற்கு ஆள் பற்றாக்குறையின் காரணமாக வாடிக்கையாளர் வருத்தமுற்றுத் திரும்பிச்செல்வதும் மற்றொருபுறம் வாடிக்கையாளர் விரும்பும் பொருள் தட்டுப்பாடு காரணமாக வியாபாரம் கையைவிட்டுப் போவதும் என்ற நிலையில் வணிகநிறுவன உரிமையாளருக்கு ஏற்படும் மனஉளைச்சல். இது ஒவ்வொரு ஆண்டும் தொடரக்கூடிய நெருக்கடியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தவிதமான நெருக்கடிக்கு மாறாக ஆடி, மார்கழி, புரட்டாசி போன்ற மாதங்களில் தொழில் துறையினரும் வணிகர்களும் சந்திக்கின்ற நெருக்கடி வேறுவிதமானது. அன்றாடச் செலவுகளுக்கும், மின்கட்டணம், தொலைபேசிக்கட்டணம், வேலையாள் சம்பளம், கடைவாடகை போன்றவற்றைச் சமாளிப்பதற்கும் சரக்கு சப்ளை செய்தவர்களுக்குக் குறித்த தேதியில் பணம் கொடுக்க முடியாத நிலையும் என்று இது இன்னொரு விதமான நெருக்கடி. இந்த நேரத்தில்தான் சிறு வியாபாரிகள் வட்டிக்குக் கடன் வாங்கி பிறகு அது தொடர்கதையாகி இறுதியில் தனது கடையையே இழந்து தெருவில் நிற்கும்படியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவு வசதியான பின்புலமுள்ள வணிகர்களாலேயே இந்த நல்லநாள் என்ற பண்பாடு ஏற்படுத்தும் நெருக்கடியை ஈடு கொடுத்துச் சமாளிக்க முடிகிறது. மற்ற சாமானியர்களுக்கு இந்த இந்துமதம் சார்ந்த நல்லநாள் என்பது குழிபறிக்கும் நாளாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்குறிப்பு ‡ 1 :&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடத்தில் வரதட்சணை, சீர் என்பதே கூடாதது, தவறானது என்ற கருத்துதான் சரியானது, முற்போக்கானது என்றாலும் இன்றும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இந்த வழக்கம் ஆதிக்கம் செய்து வருகின்ற நிலையில் அதை ஒட்டியே சிறு தொழில் உற்பத்தி , வணிகம் இயங்குகின்ற நிலையில் இந்த முகூர்த்த நாட்கள் என்பவை எவ்வாறு நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றன என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2008‡ ஆம் ஆண்டின் மொத்த சுப முகூர்த்த நாட்கள் 54. இதிலும் வளர்பிறை முகூர்த்தநாட்கள் என்பவை சனவரியில் ஒன்று, பிப்ரவரியில் இரண்டு, மார்ச்சில் நான்கு, ஏப்பிரலில் இரண்டு, மேயில் மூன்று, ஜுனில் இரண்டு, ஜூலையில் ஒன்று, ஆகஸ்ட்டில் கிடையாது, செப்டம்பரில் நான்கு, நவம்பரில் மூன்று , திசம்பரில் மூன்று. ஆக மொத்தம் 25 நாட்கள். இந்த 25 நாட்களில்தான் தமிழகத்தின் ஒட்டு மொத்தத் திருமணங்களும் நடைபெறுகின்றன. இன்று இந்துக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் மற்றொரு போக்கு வெள்ளிக்கிழமை இரவு வீட்டு வாசலில் கற்பூரம் கொளுத்துவது; அதே போல் வணிகர்கள் கடைமூடும் வேளையில் கற்பூரம் ஏற்றி தேங்காயை கடைஎதிரே வீதியில் சிதறடிப்பது என்பதுமாகும். காரைக்குடியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு மட்டும் குறைந்தது 1000 தேங்காய்கள் வீணடிக்கப்படுகின்றன. வீட்டுச்சமையலுக்கு முழுத்தேங்காய் வாங்கமுடியாமல் இன்றும் தேங்காய்ச்சில் வாங்கிச் செல்லும் ஏழைகள் வாழும் ஊரில் மாதம் 5000‡க்கும் அதிகமான தேங்காய்களை வீதியில் அடித்து வீணடிக்கின்றனர்.&lt;br /&gt;இதுபோல் காலத்தின் ஒவ்வொரு நாளின் மீதும் புதிது புதிதாக நம்பிக்கைகளை பிழைப்புவாதிகள் , சோதிடர்கள் , மதவாதிகள் , பார்ப்பனர்கள் , வியாபாரிகள் உற்பத்தி செய்து கொண்டேயிருக்கின்றனர். சமீபத்திய உற்பத்தி ‘அட்சயதிதி’ ‡ அன்று தங்கம் வாங்க வேண்டும் என்ற வழக்கம். இதற்கு முன்பதிவு செய்யும் அளவிற்கு இன்று நிலைமை முற்றிவிட்டது.&lt;br /&gt;அன்றைய நாளில் மட்டும் பல கோடிகளுக்குத் தங்கம் விற்பனையாவதாகப் புள்ளிவிபரங்கள் போட்டி போடுகின்றன. இந்த மூடத்தனத்தில் வங்கிகளும் (ணூளீணூளீணூ வங்கி அட்சயதிதி அன்று தங்கக்காசு விற்பனையை அமோகமாகச் செய்கிறது) இதையயல்லாம் காணும் போது இந்த இந்துக்களைப் போன்ற முட்டாள்கள் உலகத்தில் வேறுயாரும் உண்டா என்று கேட்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் சூரியனையும் சுற்றிவருவதால் ஏற்படும் மாறுதல்களையே பகல், இரவு, காலை, மாலை, முற்பகல், பிற்பகல், நன்பகல், முன்னிரவு, பின்னிரவு, நள்ளிரவு, எனவும் இவ்வாறு தொடர்ந்து ஏற்படும் மாறுதல்களையே நாள் , வாரம், ஆண்டு என பலவாறு கணக்கிடுறோம். இவ்வாறு பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் 24 மணி நேரத்தை ஒரு நாள் எனக் கணக்கிடும்போது அந்த 24 மணி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மணிநேரத்தை மட்டும் இராகுகாலம், எமகண்டம் என்றும் மற்றொரு நேரத்தை சுபமுகூர்த்தம் என்றும் கூறுவதும், அதே போல் பூமி சூரியனைச்சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அளவான 365 நாள்களில் ஒரு சில நாள்களை மட்டும் நல்லநாள்கள் ( முகூர்த்த நாள்கள் ) எனக் கருதுவதும் அறியாமை, மூடத்தனம் என்பதை சித்தர்கள் துவங்கி பெரியார்உள்ளிட்ட பலரும் சுட்டிக்காட்டிய பின்னரும் தமிழர்கள் அறிவு பெற்ற பாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நியாயமாக இவ்விடத்தில் தமிழர்கள் என்று பொதுவாகக் கூறுவது தவறாகும். ஏனெனில் இசுலாமியர் இவ்வாறு நல்லநேரம் பார்த்துத் திருமணம் போன்றவற்றைச் செய்வதில்லை 1 ஆ: எனவே இந்துக்கள் என்று கூறுவதே சரியாகும். ஆக, இந்துக்கள் இன்றைய நவீன யுகத்திலும் 2000 ஆண்டு வழக்கமான நாள் நட்சத்திரம் பார்த்துச் செயல் ப டு வ ç த த் தொ ட ர் வ து வினோதமும் வேடிக்கையுமாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நட்சத்திரம் பார்த்துச் செயல்பட்டது முட்டாள்தனமில்லை. அன்று வானமும் , நிலவும், நட்சத்திரங்களுமே காலம், திசைகாட்டும் கருவி. ஒரு குறிப்பிட்ட நட்சத்திரக்கூட்டம் வானில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோன்றினால் மழைவரும் என்பதைத் தனது அனுபவத்தில் கற்றிருந்த அன்றய மனிதன் உடனே விதைத்தான். இதுபோல் வானில் நட்சத்திரக் கூட்டங்களின் வடிவம், இடம் இவற்றைக் கண்டே தன் அன்றாடப்பணிகளை மேற்கொண்டான். பின்பு இதுவே வழிகாட்டும் பதிவாக மாறி ஆவணப்படுத்தப்பட்டு பஞ்சாங்கம் என்ற பெயர் பெற்றது. இன்று வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் கூறும் செய்திகளைக் கேட்டு விவசாயிகள் செயற்படுவதைப் போல் அன்று பஞ்சாங்கத்தைப் பார்த்து மனிதர்கள் செயல்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் காலப்போக்கில் பஞ்சாங்கத்தில் பல்லி விழும் பலன் போன்றவை இடைச்செருகப்பட்டு பார்பனியமயமாகிப் போனதாக த. வி. வெங்கடேசுவரன் கூறுகிறார். (நாள் என்னசெய்யும், கோள் என்னசெய்யும் நூலில் ...) அந்தப் பழைய பஞ்சாங்கத்தையே இன்றும் பார்த்துத் தங்களின் செயல்களை இந்துக்கள் மேற்கொள்வது மிகவும் மூடத்தனமாகும். இன்று எவரும் வானத்தைப்பார்த்து நேரம் சொல்ல வேண்டியதில்லை; திசை சொல்லவேண்டியதில்லை. முன்பு ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்ற மீனவர்கள் இரவில் வானத்தை, நிலவை, நட்சத்திரத்தைப் பார்த்துத் தங்களின் பயணத்தின் திசையையும், நேரத்தையும் கணித்துக் கொண்டனர். இன்று திசை காட்டும் கருவி, அலைபேசி (துலிணுஷ்யிe ஸ்ரீஜுலிஐe) ழழியிவதீ வீழியிவதீ போன்றவற்றைக் கையில் எடுத்துச் செல்கின்றனர். இதனால் மழை,புயல் போன்றவற்றால் வானம் சரிவரத்தெரியாமல் திசையையும்,நேரத்தையும் சரிவரக் கணிக்கமுடியாமல் அவதிப்படும் நிலை தற்போது நவீனக் கருவிகளின் பயன்பாட்டின் காரணமாகக் குறைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக காலத்தால், விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளால் மக்கள் மாறவேண்டும். ஆனால் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துத் திருமணம், வீடு குடிபுகுதல், தொழில் துவங்குதல் போன்ற செயல்களை இந்துக்கள் இன்றும் கைவிடாமல் தொடர்வதால் ஏற்படும் சிரமங்களை, நெருக்கடிகளைப்பற்றி சமூக அக்கறையுள்ள யாரும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.&lt;br /&gt;ஆனால் சமூக அக்கறைகொண்டு அரசியல் இயக்கங்களில் செயல்படும் தோழர்களே கூட இந்த நல்ல நாள், நல்ல நேரம் போன்றவற்றைப் பற்றித் தெரிந்தே கண்டும் காணாமல்விடுவது அல்லது கவனமின்றிக் கடைப்பிடிப்பது போன்ற நிலைகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.&lt;br /&gt;முதலாளிய, பார்ப்பனிய இயக்க, கட்சித் தோழர்களைப்பற்றி நாம் இங்கு கூறவில்லை. சமூக மாறுதலுக்காக நிற்கும் திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், தமிழ்தேச விடுதலை, சாதி ஒழிப்பு மற்றும் தாழ்த்தப்பட்டோர் விடுதலை இயக்கம், பெண் விடுதலை இயக்கம் சார்ந்த தோழர்களைப் பற்றியே இங்கு கூறுகிறோம். நமக்குத் தெரிந்தவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான தோழர்கள் நல்லநாள், நேரம் பார்த்தும் சடங்கு சம்பிரதாயங்களோடு சுயசாதித் திருமணங்களையே நடத்துக் கொள்கின்றனர். விதிவிலக்கான ஒரு சிலரும் தங்களின் சுயபுரிதல், நேர்மையின் காரணமாகத்தான் சாதி மறுப்பு, சடங்கு மறுப்புத் திருமணங்களை மேற்கொண்டனரே தவிர இதில் கட்சிக்கட்டுப்பாடு ஏதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது நாள் வரை பெரும்பான்மையான கட்சித் தோழர்கள் மத்தியில் சாதி, சடங்கு விசயத்தில் பெரிய விழிப்புணர்வோ, கவனம் குவிக்கப்படவோ, நாம் செய்வது சரியா? என்ற கேள்வி எழும் நிலையோ ஏற்படுத்தப்படவே இல்லை. மேலும் வேதனை என்ன வென்றால் இதுபோன்ற சுயசாதி, சுபமுகூர்த்த, சடங்கு சம்பிரதாயத் திருமணங்களுக்கு கட்சித்தலைமைத் தோழர்கள் வந்திருந்து வாழ்த்துரை வழங்குவது ஏதோ புரட்சிகர மாநாடு போல செங்கொடி கட்டியும், பேனர்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருப்பதும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை புரட்சிக்குப்பிறகு ஒரு சோசலிச அதிகாரம் நிறுவப்பட்டபின்புதான் இதுபோன்ற பண்பாட்டு விசயங்களில் கவனம் குவிக்கவேண்டும்; அது வரை ஊரோடு ஒத்துப்போக வேண்டும் என்ற தெளிந்த முடிவோடே இவ்வாறு பெருந்தன்மையாகச் செயல்படுகின்றனரோ என்று கருதவேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் எனக்குத் தெரிந்த (னி.ஸி) மார்க்சிய இலெனினிய இயக்கத்தோழர்கள் பலரும் இது போன்ற புரிதலில் தான் இருந்தனர்; செயல்பட்டனர். குறிப்பாக 70களில் மிகத்தீவிரமாக செயல்பட்டுத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு சிறைசென்ற தோழர் ஒருவர் இந்த சாதி, சடங்கு, நாள்நட்சத்திரம் போன்ற விசயங்களில் எவ்வித மறுப்பும் கூறாமல் குடும்பத்தாரோடு உடன்பட்டுப் போனதோடு நம்மோடு விவாதிக்கும்போது ‡ ‘இவையயல்லாம் புதிய பொதுவுடைமைச் சமுதாயத்தில்தான் மறையும்; அதுவரை இதற்கெதிராகப் போராடவோ, மாற்ற முயற்சிக்கவோ கூடாது’ என‡விவாதிக்கவும் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விதப்புரிதல் கொண்ட தோழர்கள் சி.பி.அய், சி.பி.எம், சி.பி.அய். (எம்‡எல்) என்ற மூன்று இயக்கங்களிலும் பரவலாக உள்ளனர். ஏனென்றால் பண்பாட்டு விசயத்தில் கறார்தன்மையும், உறுப்பினர் தகுதியில் ஒன்றாக பண்பாட்டு நடவடிக்கைகளை இணைக்காததும் இதற்குக் காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேநிலை தமிழத்தேசிய இயக்கங்களிலும் காணப்படுகிறது. திராவிடர் கழகங்கள் இவ்விசயத்தில் ஓரளவு முன்னேறி உள்ளன எனலாம். ஏனெனில் அவை பார்ப்பனிய பண்பாட்டு விசயங்களை மய்யப்படுத்தி அவற்றிற்கெதிராக இயங்குவதால் இ ந்நி ç ல. ஆனால் அ தி லு ம் ¼ த V ழர்க ள் ப ல ரு ம் சுயசாதித்திருமணங்களை மேற்கொள்வதே அதிகமாகும். அடுத்து தாலி மறுப்பு, பார்பனியச் சாதிமறுப்பு, சடங்கு மறுப்பு என முற்போக்காக மேற்கொள்ளப்பட்ட சில திராவிடர்கழகத் திருமணங்கள் கூட இந்துக்கள் நம்புகின்ற அதே நல்ல (முகூர்த்த) நாளில் நடைபெற்றது ஏன் என்பது நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கவனமின்மை என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதேசமயம் சாதி என்ற கொடூரமானதும், கெட்டிதட்டிப்போன ஒன்றையே புறக்கணித்த தோழர்களுக்கு இந்த ‘நல்ல நாள்’ என்ற மூடநம்பிக்கையைப் புறந்தள்ளுவதா கடினம் என்ற கேள்வியும் எழுகிறது.&lt;br /&gt;அண்மையில் முன்னாள் கம்யூனிஸ்டு (நக்சல்பாரி), இன்னாள் ‡ தியாகி இமாணுவேல் பேரவை, சாதி ஒழிப்பு முன்னணியின் ‡ செயல் வீரருமான தேவகோட்டைப் பகுதியைச் சேர்ந்த மூத்த தோழர் நமசு, தோழர் பாட்டாளி எழுதிய ‘கீழைத்தீ’ என்ற நாவல் மீதான விமர்சனக் கூட்டத்திற்கு (30.11.2008 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி) ஏற்பாடு செய்திருந்தார். கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்கள் 150. நூறுபேர் வருவார்கள் என்றார்; (தோழர் நமசுவுக்கு 30.11.2008 அன்று முகூர்த்தநாள் எனத் தெரியவில்லை) ஆனால் கூட்டத்திற்கு இருபது நபர்களுக்குள்ளாகவே வந்திருந்தனர். இதுதான் இன்றைய நிலை. கலை இலக்கிய அரசியல் கருத்தரங்குகளை சனி, ஞாயிறு போன்ற நாட்களிலேயே இன்று பெரும்பாலும் நமது தோழர்கள் நடத்துகின்றனர். ஏனெனில் கலந்து கொள்பவர்களின் அலுவலகப்பணி பாதிக்கக்கூடாது என்பதால்தான். இன்று இதே நோக்கிலேயே இந்துக்களும் ஞாயிற்றுக்கிழமையில் வரும் முகூர்த்தநாளைத் தேர்வுசெய்து திருமணத்தை நடத்துகின்றனர். இந்துக்கள் தங்களின் சடங்கு சம்பிரதாயத்தை, நம்பிக்கையை நவீனச்சூழலுக்கு ஏற்பவும் அதே சமயம் கைவிடாமலும் தொடர்ந்து கட்டிக்காத்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் நமது தோழர்கள் கூட்டங்களை, கருத்தரங்குகளை சனிக்கிழமைகளில் மட்டுமே நடத்தவேண்டும். ஏனென்றால் சனியும் செவ்வாயுமே இந்துக்களைப் பொருத்தவரை மோசமான(?!) நாட்களாகும். வேறு என்ன செய்வது! நம்மால் பெரும்பான்மையான மக்களை (இந்துக்களை) மாற்ற முடியாதபோது, மேலும் சமூகமாற்றத்திற்காக நிற்கும் நம்மாலேயே (மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய வாதிகளாலேயே) நல்ல நாள், நேரம், முகூர்த்தநாள் போன்ற பார்ப்பனிய மூடத்தனத்தை எதிர்த்து, மீறி இல்ல நிகழ்வுகளை மேற்கொள்ள முடியாதபோது குறைந்தபட்சம் நமது குடும்ப உறுப்பினர், உறவினரோடு எதிர்த்துப் போராடி தோற்றுப்போகாமல் கூட  அப்படியே அவர்களின் விருப்பத்திற்குட்பட்டுப் போகும் நிலையில் கலை இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகள், போராட்டங்கள் ஏன் புரட்சியேயானால் கூட இந்துக்களின் முகூர்த்த நாள்  நல்லநாள்  தவிர்த்த பிற கரிநாட்களில் (அமங்கலநாட்களில்) எமகண்டம், இராகுகாலத்தில் துவங்குவதே சரியாகும் என்று தோன்றுகிறது.பின்குறிப்பு : தோழர்களே! இக்கட்டுரை தனிநபர் எவரையுமோ அல்லது மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களையோ கட்சிகளையோ இழிவு செய்யும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை. மாறாக என்னையும் உள்ளடக்கி நமது தோழர்கள் மத்தியில் உள்ள நாள், நட்சத்திரம் குறித்த விழிப்புணர்வற்ற நிலையையும், பார்ப்பனியத்திற்குப் பலியாகிப்போயுள்ள நிலையையும் சுட்டிக்காட்டி சிந்திக்கத்தூண்டுவதற்காகவும், "இல்லை! நாள் நட்சத்திரம் பார்ப்பதால், பார்ப்பனியச் சடங்குகளை மேற்கொள்வதால் சமூகமாறுதலுக்கோ புரட்சிக்கோ, குறைந்தபட்சம் சமூக முன்னேற்றத்திற்கோ ஒரு கேடும் வந்துவிடப்போவதில்லை" என்று கருதும் தோழர்கள் மனம்திறந்து வெளிப்படையாகத் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எனவே தோழர்கள் திறந்தமனதோடு இதுகுறித்து ஒரு விவாதத்தை (அ) உரையாடலை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்துக்கள் என்போருக்கு இங்கு வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஓர்வழிமுறை (சாதிரீதியான வழிமுறை) வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் பிற மதத்தினருக்கும் வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் மதமற்ற, சாதியற்ற, சமூகமாற்றத்திற்காகப் போராடுபவர்கள் என்போருக்கான பண்பாட்டு வழிமுறைகள் என்ன? என்பதுபற்றிய தெளிவான வழிகாட்டல்கள் ஒவ்வொரு இயக்கத்திலும் இதுவரை வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறதா அல்லது அப்படி எதுவும் தேவை இல்லையா என்பது பற்றியும் தோழர்கள் சிந்திக்கவும், உரையாடவும் வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்குறிப்பு 1 :&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு காலமாக சாதி இந்துக்களிடம் செல்வாக்கோடு இருந்த நாள், நட்சத்திரம், ஜாதகம் பார்த்தல் போன்ற வழக்கங்கள் தற்போது நகர்ப்புறங்களில் வாழும் தாழ்த்தப்பட்டோர் மத்தியிலும் வெகுவாகப் பரவிவருகிறது. காரைக்குடியில் ஒரு பகுதியைச் சேர்ந்த அருந்ததியரில் எவராவது ஒருவர் இறந்துவிடும்போது அப்பகுதியின் தெரு முக்கியஸ்தர்கள் நான்குநபர்கள் சோதிடரிடம் சென்று ‘இவர் இத்தனை மணிக்கு இறந்துவிட்டார், எத்தனை மணிக்கு பிணத்தை எடுக்கலாம்’ என நேரம் குறித்து வந்தே மற்ற காரியங்களைப் பார்க்கிறார்களாம்.&lt;br /&gt;அச்சோதிடன் சாவுக்கு நேரம் குறித்துச் செல்ல வந்த அருந்ததியர்களைத் தன் வீட்டு வாயிலிலேயே நிறுத்தி நேரம் குறித்துக் கொடுத்து ரூ.51 தட்சணை வாங்கிக் கொண்டு அனுப்பிவிடுவானாம். இச்சோதிடம் பார்த்துச் சடலம் எடுக்கும் வழக்கம் மிகச் சமீபமாகத்தான் பரவிவருவதாகவும் முன்பு காலண்டரைப் பார்த்து நல்ல நேரம் குறித்துக் கொண்டதாகவும் கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து அண்மையில் பெய்த கனமழையின்போது என் துணைவியார் வழி உறவினர் ஒருவரின் வீட்டுச்சுவர் விழுந்துவிட்டது. உடனடியாக வேறு வீடு வாடகைக்குக் கிடைக்காமல் அவர்கள் பட்ட துயரமும், வீடுதேடிப்போன இடங்களில் அருந்ததியர் என்றதால் வீடுதரமறுத்து சாதித் திமிரன்/ள் கள் கூறிய காரணங்கள் நாகரிக (?!) தமிழ்ச் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டியவை.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒருபுறம் இருக்க அவ்வுறவினர்கள் ஒவ்வொரு சோதிடனாகத் தேடிச் சென்று தங்களின் துயரங்களுக்கான காரணம் என்ன? என்று ஜாதகம் பார்த்து அலைந்து திரிந்தது வேதனையிலும் வேதனை.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்குறிப்பு ‡ 1 அ : &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்குச் சில்லரை வணிகம், உள்நாட்டுச் சிறு தொழில் போன்றவை உலகமயம், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் தலையீடு போன்றவற்றால் நெருக்கடிக்குள்ளாகி நசிந்து போய்க் கொண்டிருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இது மேலிருந்து அல்லது வெளியிலிருந்து திணிக்கப்படும் நெருக்கடி என்றால் பார்ப்பனியப் பண்பாட்டுத் தேவையை மையமாகக் கொண்டு இயங்குதல் என்பது சிறுதொழில், வணிகத்தின் உள்ளிருந்து அல்லது கீழிருந்து கொல்லும் நோயாக இருக்கிறது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்குறிப்பு ‡ 1 ஆ :&lt;br /&gt;&lt;br /&gt;இசுலாம் மார்க்கத்தில் இவ்வாறு நல்லநேரம் என்பது இல்லாவிட்டாலும் இன்று நடைமுறையில் இந்துக்களைப் பார்த்து இசுலாமியரும் பல்வேறு மூடத்தனங்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்துக்களைப் போலவே சனியையும், செவ்வாய்க்கிழமையையும் திருமணத்திற்கு ஏற்றநாள் அல்ல என்று ஒதுக்குகின்றனர். அதுபோல் சில பகுதிகளில் சோதிடம் பார்த்தல், மந்திரித்து தாயத்துக் கட்டுதல் போன்ற வழக்கங்களும் கடைப்பிடிக்கப்படுகிறது.&lt;br /&gt;தங்கள் மதத்திற்குள் வந்துவிட்ட தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு செய்யாமல் சமமாகவும் திருமண உறவுகளை மேற்கொள்ளும் அதே வேளை இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை இந்துக்களைப் போலவே ஒதுக்கிப்பார்க்கும் வழக்கமும் நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமப்புறத்தில் இசுலாமியரிடம் இந்தவிதப் போக்குகள் மிகுந்து காணப்படுகின்றன. தமிழகக் கிறித்தவர்களைவிட இசுலாமியரிடம் பார்ப்பனியம் குறைவாகச் செல்வாக்குச் செலுத்துகிறது என்று வேண்டுமானால் கூறலாம். மற்றபடி பார்ப்பனியப் பண்பாட்டின் கொடிய விசநாக்குத் தீண்டாத மனிதர் இங்கு எவருமில்லை என்றே கூற வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்குறிப்பு ‡ 2 :&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூத்த தோழர் கூறுகின்ற கருத்திற்கு வலுச்சேர்ப்பது போன்ற வகையில் ‘செப்டம்பர் 2008 தீராநதி’ இதழில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. "சிண்டு வைத்த மாவோயிஸ்ட், பூணூல் அணிந்த மாவோயிஸ்ட், ருத்ராட்சக் கொட்டை அணிந்த மாவோயிஸ்ட்டுகளையும் கூடச் சந்திக்க நேரிட்டது. ‘இதெல்லாம் என்ன’ என்று அன்று மாலை உள்ளூர்த் தோழர்களிடம் கேட்டபோது ‘ஆமாம் இங்கு இது ஒரு பிரச்சனைதான்; என்ன செய்வது?. இங்குள்ள கலாச்சாரம் அப்படி’ என்று சமாளித்தார்கள்..." (தோழர். அ.மார்க்ஸ். ‘சிறைப்பட்ட வாழ்வுகள்’ கட்டுரையில்)&lt;br /&gt;ஜார்கண்ட் மாநிலச் சிறையில் வாடும் மாவோயிஸ்டுகளைப் பற்றிய உண்மையறியும் குழுவில் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்களையே தோழர் அ.மார்க்ஸ் மேலே குறிப்பிடுகிறார். மேலும் அ.மார்க்ஸ் இப்படிக் கூறுகிறார். "கலாச்சாரம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரித்தான் இருக்கிறது. கலாச்சார எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் நடந்ததுபோல இங்கு நடக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது என நினைத்துக்கொண்டேன். ‘தமிழகத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை’ என்று மட்டும் சொன்னேன்"&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்குறிப்பு ‡ 3 :&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்தமட்டிலும் ம.க.இ.க ‘பாட்டாளி வர்க்க பண்பாட்டு நெறிமுறைகள்’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டு உள்ளதாக அறிகிறேன். அதில் கம்யூனிஸ்ட் என்பவர், வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வின் போதும் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டல்கள் உள்ளன. மேலும் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டிய முறையில் ஒரு சராசரி பெற்றோரிடமிருந்து கம்யூனிஸ்ட்டுகள் எவ்வாறு மாறுபட்டுள்ளனர் என்பது பற்றியயல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளதாக நினைவு. ம.க.இ.க தோழர்கள் எந்த அளவிற்குக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.&lt;br /&gt;இந்நூலைப் பிற இயக்கத்தவர் ஏற்று நடைமுறைப்படுத்தாவிட்டாலும் கூட விவாதத்திற்குரியதாக மாற்றலாம். ஆனால் இங்கு நிலவும் கட்சித் தீண்டாமை, இயக்கத்தீண்டாமைச் சூழலில் இது பேராசைதான். மேலும் கட்சியையோ, இயக்கத்தையோ சாராத தனிநபராக செயலற்று இருந்தும். பிற அனைவரையும், அனைத்து இயக்கங்களையும் தனக்கும் தன் சிந்தனைக்கும் கீழான புழுவைப்போல் பாவிக்கும் தன்னகங்காரப் பேர்வழிகள் நிரம்பிய சூழலில் பிற இயக்க வெளியீட்டைப்படித்துப் பரிசீலிப்பதும், ஏற்றுக்கொள்வதும், நடைமுறைப்படுத்துவதும் அழகான ஆசைதான்!&lt;br /&gt;இதுபோன்ற மற்றொரு நூல் சிலிக்குயில் பதிப்பகம் 1986‡ஆம் ஆண்டு வெளியிட்டதான எரிதழல் எழுதிய ‘பண்பாடும் புரட்சியும்’ ஆகும். எரிதழல் என்ற புனைப்பெயரில் எழுதியவர் தோழர்.அ.மார்க்ஸ் என்று தெரியவருகிறது. அன்று அவர்சார்ந்திருந்த புரட்சிப்பண்பாட்டு இயக்கம் கொண்டிருந்த நிலைப்பாடாகவும் இந்நூலின் கருத்துக்களை நாம் கொள்ள முடியும்.&lt;br /&gt;இந்நூலில் பண்டிகைகள், திருவிழாக்கள், கூட்டுவழிபாடுகள் பற்றியும் நம் தோழர்கள் இவற்றை அணுக வேண்டிய வழிமுறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்நூலையும் இன்றும் வாசிப்பதும் விவாதிப்பதும் அவசியமானதேயாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-290576712770349195?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/290576712770349195/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=290576712770349195' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/290576712770349195'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/290576712770349195'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2010/11/blog-post.html' title='நல்ல நேரம் தமிழர்வாழ்வில் ஏற்படுத்தும் நெருக்கடியும் சீரழிவும் - குமரன்தாசு'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-569492479046487718</id><published>2010-09-06T10:54:00.000-07:00</published><updated>2010-09-06T11:26:36.508-07:00</updated><title type='text'>‘நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை----     வே. மதிமாறன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0i4osZcI9Os/TIUsUFGKaEI/AAAAAAAAABs/3bUutw8cm4A/s1600/mathimaran-wrapper.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 222px;" src="http://2.bp.blogspot.com/_0i4osZcI9Os/TIUsUFGKaEI/AAAAAAAAABs/3bUutw8cm4A/s320/mathimaran-wrapper.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513862042262071362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’&lt;br /&gt;6&lt;br /&gt;01                                                              &lt;span style="font-weight:bold;"&gt; வே. மதிமாறன்&lt;/span&gt;&lt;br /&gt;2010&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்பேத்கர் என்னும் ஆயுதம்….&lt;br /&gt;&lt;br /&gt;‘நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை’ புத்தகத்தின் இரண்டாம்  பதிப்புக்கான முன்னுரை:&lt;br /&gt;மூன்று சிற்றிதழ்களைத் தவிர, எந்த வெகுஜன பத்திரிகைகளிலும் நூல் அறிமுக பகுதிகளில்கூட வெளியாகாமல், அனேகமாக முதல் பதிப்பு 7 மாதங்களுக்குள் தீர்ந்துவிட்டது. தீரும் தருவாயில்தான் இதற்கான வெளியீட்டு விழா மும்பையில் ‘விழுத்தெழு இளைஞர் இயக்கம்’ சார்பில் நடைபெற்றது. புத்தகத்தைப் படித்த தோழர்களின் பரிந்துரைகளினாலேயே இந்த வேக விற்பனை சாத்தியமாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புத்தகத்தை எழுதியதற்கான நோக்கம் டாக்டர் அம்பேத்கரை, பொதுதளத்திற்கு கொண்டு போகவேண்டும். தலித் அல்லாதவர்களும் அவரை தலைவராக கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் ஒரு முயற்சியாக டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T-Shirt தலித் அல்லாதவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், என்று முயற்சி எடுத்து அதை கொண்டுவந்தோம். அதன் வெளியீட்டு விழாவும் மும்பையில் ‘விழுத்தெழு இளைஞர் இயக்கம்’ சார்பில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணல் அம்பேத்கர் படம் போட்ட T-Shirt கொண்டு வர நாங்கள் முயற்சித்போது எதிர்ப்புகளை, சதிகளை சகஜமாக சந்தித்தோம். சிலர் ‘இதை கொண்டு வர உங்களுக்கு என்ன யோக்கியதை? என்றும் கேட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை யாரும் கொண்டு வரவில்லை என்பதே எங்களுக்கான முழு யோக்கியதை. தந்தை பெரியாரின் பாணியில் சொல்வதானல், ஜாதி ஒழிப்புக்கு யாரும் முன்வராதபோது, ‘இதை செய்வதற்கு யாரும் முன்வரவில்லை என்பதினாலேயே நான் என்தோள் மேல்போட்டுக் கொண்டு செய்தேன்’ என்றாரே. அதுபோல்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் அம்பேத்கர்,  பிற்படுத்தப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்டு ‘சூத்திரர்கள் யார்? அவர்கள் எவ்வாறு சூத்திரர்கள் ஆக்கப்பட்டார்கள்?’ என்ற நூலை எழுதினார். அதை எழுதியபோது இருதரப்பில் இருந்து அவருக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்படுத்தப்பட்டவர்களின் இழிநிலைக்கு, சூத்திரத் தன்மைக்கு பார்ப்பனியமும், இந்து மதமும்தான் காரணம் என்று ஆதாரத்தோடு நிரூபித்திருந்தார். அதனால் பார்ப்பனர்கள் டாக்டர் அம்பேத்கர் மீது கடும் வெறுப்பு கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றி எழுதுவதற்கு தாழ்த்தப்பட்டவரான இவருக்கு என்ன யோக்கியதை, தகுதி இருக்கிறது?’ என்று ஜாதிவெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு எத்தகைய தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே மிகச் சிறந்த சான்றாகும்.” என்றார் டாக்டர் அம்பேத்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பன அறிவாளிகளோ,  ‘தேவதைகள் போக அஞ்சுகிற, தயங்குகிற இடத்திற்கு, முட்டாள் துணிவோடு போவான்’ என்ற பழமொழியை எடுத்துக்காட்டாக கூறி அண்ணலின் அந்தப் புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவதைகள் என்று ‘உயர்’ ஜாதிக்காரர்களையும், ‘முட்டாள்’ என்று டாக்டர் அம்பேத்கரையும் குறிப்பிட்டார்கள், ஜாதி வெறியர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மாபெரும் மேதைகளுள் ஒருவரான அண்ணல் அம்பேத்கர் இப்படி பதில் அளித்தார், “தேவதை தூங்கச் சென்றுவிடும்போது அல்லது உண்மையைக் கூறுவதற்குத் தயாராக இல்லாதபோது ஒரு முட்டாளுக்குக்கூட அவன் செய்யவேண்டிய கடமை இருக்கிறது என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல் தேவதைகளான பல முற்போக்கு இயக்கங்களும், அறிவாளிகளும் டாக்டர் அம்பேத்கரை பொதுதளத்திற்கு கொண்டு வரமுயற்சிக்காததால், நாங்கள் இதை செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் அம்பேத்கர் T-Shirt டை பொதுபுழக்கத்திற்கு கொண்டு சென்றபோது, நானும் தோழர்களும் சந்தித்த அனுபவங்கள் மிக மோசமானது. வருத்தத்திற்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் குறிப்பாக தோழர் லெமுரியனின் அனுபவத்தை சொல்லலாம்.  தோழர் லெமுரியன், அண்ணலின் T-Shirt டை தலித் அல்லாதவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறவர். அதன் பொருட்டு அவர் சந்தித்த அனுபவம் குறிப்பிடத்தக்க அளவில் மோசமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வீட்டுற்கு கட்டிட வேலைக்கு வந்த கொளுத்துக்காரர், லெமுரியனின் அம்மாவிடம்,  ‘பயன்படுத்துவதற்கு பழைய துணி இருந்தால் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். அதை கேட்ட லெமுரியன், பிளாஸ்டிக் கவரில் பேக் செய்து வைத்திருந்த புதிய டாக்டர் அம்பேத்கர் T-Shirt டை கொண்டு வந்து தந்திருக்கிறார். இலவசமாகத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;T-Shirt ல் அண்ணலின் படத்தைப் பார்த்த கொளுத்துக்காரர், ‘அய்யய்ய….இதெல்லாம் எனக்கு வேண்டாங்க…. பழைய துணியிருந்த கொடுங்க…” என்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மோசமான உணர்வு, டாக்டர் அம்பேத்கரை பற்றியான இந்த மதிப்பீடு, ஏதோ அந்த கொளுத்துக்காரர் ஒருவருக்கு மட்டும் உரியதல்ல. பல முற்போக்காளர்களின் உணர்வும் இப்படித்தான் இருக்கிறது. (தோழர் வேந்தனின் அனுபவம் தனி கட்டுரையாக புத்தகத்தின் பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;அம்பேத்கர் T-Shirt டை கொண்டு வந்தது கூட பிரச்சினை இல்லை. அதை அணியச் சொல்லி தலித் அல்லாதவர்களை குறிப்பாக முற்போக்காளர்களை கட்டாயப்படுத்துவதும், அணிய மறுத்தால் ஏன் என்று கேள்விக்குட்படுத்துவதும்தான் பிரச்சினைக்குரியதாக மாறுகிறது. ‘முடியாது’ என்பற்கான அரசியல் காரணங்களை தெளிவாக சொல்லமுடியாமல் ஏதோ வாயில் வருவதைச் சொல்லி, பரிதாபமாக நெளிவதும், இப்படி ஒரு நிர்பந்ததிற்கு அவர்களை தள்ளியதால், அவர்களின் இயலாமை எங்களுக்கு எதிரான கோபமாக மாறி. அந்தக் கோபம் எங்கள் மீதான அவதூறாக அவதாரம் எடுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் அம்பேத்கரின் T-Shirt பலரின் ஜாதிய உணர்வை அம்பலப்படுத்தும் ஆயுதமாக இருக்கிறது. இந்த ஆயுதத்தைக் கொண்டு வந்ததை மிக முக்கியமான ஒரு செயலாக கருதுகிறோம். இதை எங்களின் மாபெரும் தகுதியாக எண்ணி மகிழ்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை கொண்டு வந்த தோழர்களோடு இணைந்து பணியாற்றியதை நினைத்து பெருமை கொள்கிறேன். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;வெகுஜன பத்திரிகைகளில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். வேறு ஒரு நபருக்காக, நான் பரிந்துரை செய்தால், அதை உடனே செய்து கொடுக்கும் நண்பர்கள் அனேகமாக எல்லாப் பத்திரிகைகளிலும் இருக்கிறார்கள். நான் பரிந்துரை செய்து அதன் மூலம் பிரபலமான எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், எனக்கு, என் எழுத்துக்களுக்கு குறிப்பாக என்னுடைய புத்தகங்களுக்கு அறிமுகம் என்பதாகக்கூட அது நடப்பதில்லை. அது நிர்வாகம் சார்ந்த முடிவாகிவிடுகிறது அல்லது பொறுப்பில் உள்ள பார்ப்பனர்களின் கோபத்திற்கும், பார்ப்பன மனோபாவம் கொண்ட பார்ப்பனரல்லாதவர்களின் கோபத்திற்கும் ஆளாக வேண்டியிருக்கும் என்பதாலும் அது ஆரம்பத்திலேயே தோழமை ஆனவர்களாலேயே நிராகரிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மிக முக்கியமாக இன்னும் இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நான் எல்லா பத்திரிகைகளையும், பேர் சொல்லி கடுமையாக விமர்சித்திருப்பது. பத்திரிகை நிர்வாகத்திடமும், ஆசிரியர்களிடமும் செல்வாக்குப் பெற்ற மதன், ஞாநி, வாஸந்தி, மாலன், சுதாங்கன் போன்ற பிரபல பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்திருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்று, பார்ப்பனத் தன்மை கொண்ட இலக்கியங்களை, பத்திரிகைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி எழுதுவது. முற்போக்கு பார்ப்பனியத்தின் முழு அடையாளமான இலக்கிய உலகின் முடிசூடா மன்னன் சுப்பிரமணிய பாரதியின் மார்புக்குள் ஹிருதயத்தோடு கண்ணுக்கு தெரியாமல் ஹிருதயம் எது? பூணூல் எது? என்று கண்டுபிடிக்க முடியாமல், ஒளிந்திருந்த பூணூலை, பெரியார் தொண்டனுக்கே உரிய துணிச்சலோடு அறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான், பாரதியைப் போலவே பலதரப்பட்ட மக்களின் ஆதரவுக்காக முற்போக்கான அவதாரங்கள் எடுக்கும், பார்ப்பன பத்திரிகையான ஆனந்த விகடனில், என் நூல் அறிமுகம் மட்டுமல்ல, என் இணையப் பக்க அறிமுகம் கூட இதுவரை நிகழ்ந்ததில்லை. ஒருவேளை பெரியாரை பற்றி அவதூறு எழுதியிருந்தால், சிறப்பு விருந்தினராக கவுரவிக்கப்ட்டிருப்பேனோ, என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்லாமல், பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பை தாழ்த்தப்பட்டவர்களின் நிலையில் இருந்து, பார்ப்பனியத்தை தலைமேல் வைத்து பாதுகாக்கும் இடைநிலை ஜாதிகளையும் பெயர் சொல்லி விமர்சிப்பதால், சுயஜாதி பாசம் கொண்ட பத்திரிகையாளர்களின் ‘கனி’வான கோபத்திற்கும் ஆளாகி இருப்பது, புறக்கணிப்பிற்கான இன்னொரு சிறப்புக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனியத்தை சமரசம் இல்லாமல், தொடர்ந்து அம்பலப்படுத்திய தமிழர்களின் மாபெரும் தலைவரான தந்தை பெரியாரையே இந்தப் பத்திரிகைகள் இப்படித்தான் புறக்கணித்திருக்கிறார்கள். இதில் என்னைப் போன்றவர்கள் அவர்களுக்கு எம்மாத்திரம்?&lt;br /&gt;&lt;br /&gt;காலங்கள் மாறினாலும் காட்சிகளை மாற்றாத பார்ப்பனியத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால், டாக்டர் அம்பேத்கரை ஆழப் படிக்க வேண்டியது அவசியம். இதோ தான் புறக்கணிக்கப்பட்ட விதத்தை டாக்டர் அம்பேத்கர் தனக்கே உரிய மேதைமையோடு, துல்லியமாக வெளிபடுத்துகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;“பிராமணிய இலக்கியத்தை அம்பலப்படுத்தும் எந்த ஒரு முயற்சியின்பாலும் பிராமண அறிஞன் காட்டும் சகிப்புத் தன்மையற்ற போக்கு எவரையும் எரிச்சல் கொள்ளவே செய்யும். அவசியம் ஏற்படும்போதுகூட மூடநம்பிக்கைகளைச் சாடுபவனாக அவன் நடந்துகொள்ளமாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய திறன் படைத்த பிராமணரல்லாத எவனையும் இத்தகைய பணியைச் செய்வதற்கும் அனுமதிக்கமாட்டான். பிராமணரல்லாத எவனாவது இத்தகைய முயற்சியில் ஈடுபட்டால் பிராமண அறிஞர்கள் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் தீட்டுவார்கள்;  அவனுக்கு எத்தகைய மதிப்பும் மரியாதையும் தரமாட்டார்கள். ஏதேனும்  அற்பக் காரணங்களைக் கூறி அவனை அப்பட்டமாகக் கண்டிப்பார்கள் அல்லது அவனது படைப்பு பயனற்றது, சல்லிக்காசு பெறாதது என்று முத்திரை குத்துவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணிய இலக்கியத்தின் சொரூபத்தை வெளிப்படுத்திய எழுத்தாளன் என்ற முறையில் நானும் இத்தகைய கீழ்த்தரமான மோசடிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இலக்கானவன்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிராமண அறிவாளிகளின் போக்கு எத்தகையதாக இருப்பினும் நான் மேற்கொண்ட பணியைத் தொடர்வது எனது கடமை.”&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணல் அம்பேத்கரின் இந்த உறுதியை நெஞ்சில் தாங்கி, அவர் வழியில் பார்ப்பனியத்தை, அது பார்ப்பனரல்லாதவரின் சுயஜாதி ரூபத்தில் வந்தாலும் தொடர்ந்து துணிச்சலோடு அம்பலப்படுத்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்திகத்திற்கு சிறப்பான அறிமுகத்தை ஆய்வு கண்ணோட்டத்தில் எழுதியிருந்தார் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் வே. நெடுஞ்செழியன். தமிழ் ஓசை நாளிதழில் எழுதினார். தமிழ் ஓசையில் சிறப்பாக பிரசுரிதித்த அதன் ஆசிரியருக்கும், அவரை எழுத வைத்து, இந்த நூலுக்கான முதல் அறிமுகத்தை செய்த உதவிஆசிரியர் சிவகுமாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் என் புத்தகத்திற்கு சிறப்பான அறிமுகத்தை செய்கிற என் நண்பர், தீவிர பெரியார் பற்றாளர் தோழர் அரசெழிலன், தனது ‘நாளை விடியும்’ இதழில் இந்த புத்தகத்திற்கும் சிறப்பான அறிமுகத்தை செய்திருந்தார். அந்த அறிமுக உரையை ஆய்வுரையாக எழுதிய முனைவர் க.பூ. மணிமாறனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நக்கீரன் இதழின் தலைமைத் துணை ஆசிரியர் தோழர் லெனின். அரசியல் விமர்சகராக பல சிற்றிதழ்களிலும் முக்கியமான கட்டுரைகள் எழுதி வருகிறார். அந்த சிற்றிதழ்களில் ஒரு நூலைப் பற்றி அறிமுக அல்லது விமர்சன கட்டுரை எழுதவேண்டும் என்றால், அவர் என் நூலைதான் தேர்தெடுத்து இருக்கிறார். ‘வே. மதிமாறன் பதில்கள்’ என்ற என்னுடைய நூலுக்கும் சிறப்பான விமர்சனத்தை எழுதியிருக்கிறார். அதுபோல், இந்த நூலுக்கும் மிக சிறப்பான ஆய்வு கட்டுரையை எழுதியிருந்தார். நண்பர் லெனினுக்கும், அதை வெளியிட்ட ‘யாதுமாகி’ இதழுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்கள் கொண்டு வருவதை வியாபாரமாக செய்யாமல், கொள்கை பிரச்சாரமாக செய்யும்,  இனிய தோழர், அங்குசம் ஞா. டார்வின் தாசன், இரண்டாம் பதிப்பையும் விரைவாக சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வே. மதிமாறன்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;29.12.2009&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் பதிப்பு 32 பக்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு வந்துள்ளது. விலை ரூ. 60&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புக்கு;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;‘அங்குசம்’&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஞா. டார்வின்தாசன்&lt;br /&gt;எண்.15, எழுத்துக்காரன் தெரு&lt;br /&gt;திருவொற்றியூர்&lt;br /&gt;சென்னை-600 019.&lt;br /&gt;&lt;br /&gt;பேச;&lt;span style="font-weight:bold;"&gt; 9444 337384&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;www.mathimaran.wordpress.com&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-569492479046487718?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/569492479046487718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=569492479046487718' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/569492479046487718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/569492479046487718'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2010/09/blog-post.html' title='‘நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை----     வே. மதிமாறன்'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_0i4osZcI9Os/TIUsUFGKaEI/AAAAAAAAABs/3bUutw8cm4A/s72-c/mathimaran-wrapper.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-1630921236405436405</id><published>2010-07-22T10:18:00.000-07:00</published><updated>2010-07-22T10:21:15.732-07:00</updated><title type='text'>செம்மொழி மாநாடு செய்தது என்ன ?         ----  தமிழேந்தி</title><content type='html'>----  தமிழேந்தி&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாடு என்ன கிழித்தது&lt;br /&gt;திரும்பவும் கலைஞரின் குடும்பமே செழித்தது&lt;br /&gt;                                                                                                                      (செம்மொழி)&lt;br /&gt;வெட்டியாய் முந்நூற்று எண்பது கோடியைக்&lt;br /&gt;கொட்டிக் கரைத்த குடும்பத் திருவிழா&lt;br /&gt;பொட்டுப் பூச்சியாய் வாழும் தமிழனை&lt;br /&gt;முட்டாள் ஆக்கி முடித்த பெருவிழா&lt;br /&gt;                                                                                                                      (செம்மொழி)&lt;br /&gt;&lt;br /&gt;மகனொரு பக்கம் மாநாட்டைத் திறந்தார்&lt;br /&gt;மகளோ தானே எல்லாமாய்ப் பறந்தார்&lt;br /&gt;மனைவியர் மருமக்கள் பேத்தியர் இருந்தார்&lt;br /&gt;மற்றுள்ள சொந்தங்கள் முன்வரிசை நிறைந்தார்&lt;br /&gt;                                                                                                                     (செம்மொழி)&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டால் புகழப் பாவலர் ஒருபுறம்&lt;br /&gt;பல்லக்குத் தூக்கும் பேச்சாளர் மறுபுறம்&lt;br /&gt;கேட்டுக் கேட்டு மு.க. மனம்மிகக் குளிரும்&lt;br /&gt;கேட்டநம் வயிறோ தீப்பற்றிக் கருகும்&lt;br /&gt;                                                                                                                     (செம்மொழி)&lt;br /&gt;&lt;br /&gt;விருந்திட்ட இடத்தைக் கூட்டம் பிய்த்தது&lt;br /&gt;வெளிஆய்வு அரங்கை ஈக்கள் மொய்த்தது&lt;br /&gt;இருந்த தமிழ்நிலை நெஞ்சினைத் தைத்தது&lt;br /&gt;"எழும்"இந்த இனம் என்றஎண்ணம் பொய்த்தது&lt;br /&gt;                                                                                                                   (செம்மொழி)&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் நம்தமிழ் கட்டாயமி ல்லை&lt;br /&gt;அறமன்றப் படிகளைத் தமிழ்தொட்ட தில்லை&lt;br /&gt;கல்வியில் உயர்நிலை தமிழ் எட்டவில்லை&lt;br /&gt;கரைத்த பணத்துக்கு முழுப்பயன் இல்லை&lt;br /&gt;                                                                                                                   (செம்மொழி)&lt;br /&gt;&lt;br /&gt;பேருக்கு ஈழத் தமிழர்க்காய் அழுகை&lt;br /&gt;பெருங்கேடன் தில்லிக்கே கைகட்டித் தொழுகை&lt;br /&gt;யாருக்கும் பெருநன்மை கூட்டாத கூட்டம்&lt;br /&gt;யாருடைய ஆட்சிதான் தமிழ்த்துயர் ஓட்டும்?&lt;br /&gt;                                                                                                                     (செம்மொழி)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-1630921236405436405?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/1630921236405436405/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=1630921236405436405' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/1630921236405436405'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/1630921236405436405'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2010/07/blog-post.html' title='செம்மொழி மாநாடு செய்தது என்ன ?         ----  தமிழேந்தி'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-2448776873386367719</id><published>2010-01-07T07:11:00.000-08:00</published><updated>2010-01-07T07:20:26.590-08:00</updated><title type='text'>காஞ்சிபுரம் பார்ப்பன குருக்களின் காமமும்- உடைத்தெறியப் பட்ட பார்ப்பனப் புனிதமும்…</title><content type='html'>பிராமணர்கள் யார்..?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எக்காரணம் கொண்டும் சரீரப் பிராயசைப் படாமலும் எவ்விதத்திலும் நஷ்டமோ, கவலையோ அடைய வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு தங்கள் சமூகத்தைத் தவிர மற்றெல்லா மக்களுடையவும் உழைப்பால் திருப்தியால் உயிர் வாழ்க்கை வாழ்பவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;- தந்தை பெரியார் (19-09-1937 குடிஅரசு பக்கம் 9 )&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாக காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதனின் புகழ் தமிழ்நாட்டில் கொடிக்கட்டி பறக்கிறது. இளசுகளின் அலைபேசியில் குருக்களின் கருவறை லீலைகள் படங்கள் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன. இதற்கு முன்னால் காஞ்சிபுரம் ஜெயேந்திரர் மூலமாக உலகப் புகழ் அடைந்ததை நாம் அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் தற்போது தேவநாதன்.&lt;br /&gt;இது முழுக்க முழுக்க பார்ப்பனர்களும், இந்து மதத்தின் சீரழிவும் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும் இந்து மத புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட சாதீய இழிவுகளால் பாதிக்கப்பட்டோர் என்ற முறைமையில் நாம் மகிழ சில சங்கதிகள் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் நாமெல்லாம் தேவநாதனை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும். ஆலய கருவறை நுழைவுப் போராட்டம் என்பதனை நாம் வெகுநாட்களாக ஒரு லட்சிய இலக்காக வைத்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில், எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் சாதிகளை கடந்து பெண்களை கருவறைக்குள் அழைத்து சென்றிருக்கிறான் அவன். மேலும் கடவுள்ள அது: கல் தான் .. என நாம் காட்டுக்கத்தலாய் தெரு முனைகளில் கத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் வெகு சுலபமாக பாலாலும், தேனாலும் அபிஷேகம் செய்து படையல் வைத்து ஆயிரம் காலமாய் புனிதம் போற்றி தொழுகிற அந்தணர் பாதம் மட்டுமே பட்டு வந்த கருவறைக்குள் எல்லாவித தடைகளுக்கும் சவாலாய் சாதி வேறுபாடின்றி பெண் என்ற ஒற்றைத் தகுதியை மட்டும் பார்த்து கட்டிய குடுமியுடன் கட்டிப்பிடித்து ஆலிங்கணம் நடத்திய தேவநாதன் இத்தனை ஆண்டு காலம் பார்ப்பனர் கட்டி வைத்த பாரம்பரிய கோட்டையின் அடித்தளத்தில் குண்டு வைத்து தகர்த்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தேவநாதன் சாதிகளை கடந்த மனிதனாக, கல்லை கல்லாக மட்டும் உணர்கிற நாத்திகனாக நமக்குப் படுகிறான். தமிழர்க்கு எதிராக எது நடந்தாலும் குதூகலமாய் கொக்கரித்து செருமாந்த செறுக்கோடு செய்தி வெளியிடுகிற பார்ப்பன நாளேடு தினமலர் பார்ப்பனக் குருக்கள் தேவநாதனை பூசாரி தேவநாதன் என வில்லங்கமாய் விளித்து செய்தி வெளியிட்டது. குருக்கள் என்று வெளியிட்டால் அது பார்ப்பான் என பட்டவர்த்தனமாய் தெரிந்து விடும் என்பதால், சூத்திரப் பெயரான பூசாரி என்ற பட்டத்தோடு செய்தி வெளியிட்டது.&lt;br /&gt;தேவநாதன் மிகவும் பட்டவர்த்தமனமாக, வீடியோ ஆதாரங்களோடு நடத்திய கருவறை காம லீலைகள் பார்ப்பன இந்துத்வாவின் புனித முகத்தினை சிதைத்து இருக்கிறது. சாதீய கட்டமைப்புகள், கோவில், புனித பூசைகள் என திட்டமிட்டு பார்ப்பனீயத்தால் கட்டமைக்கப்பட்ட இந்துத்வா கோட்டையில் தேவநாதன் மிகப் பெரிய விரிசல். தேவநாதன் தான் முதன் முதல் பார்ப்பன சீரழிவு அல்ல. இதற்கு முன்னால் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் கஞ்சா வழக்கு உட்பட ,அனுராதா ரமணன், சொர்ணமால்யா என தொடர்ந்த காமக் குற்றச்சாட்டுகளில் காஞ்சி மடம் சிக்கிய போது பார்ப்பன உலகம் அதிர்ந்தது. இதில் என்ன மிகவும் விசேசம் என்றால் வழக்கு தொடரப்பட்டது தன்னை சட்டமன்றத்தில் பாப்பாத்தி என வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட ஜெயலலிதா ஆட்சியில். சம்பந்தப்பட்ட ஒரு சிலரை தவிர அனுராதா ரமணன் ,சொர்ணமால்யா என அனைவரும் பார்ப்பனர்களே. இப்போது தேவநாதன் காஞ்சி மட சீரழிவின் நீட்சியாக திகழ்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதன் பூணூல், உச்சிக் குடுமி ,பஞ்சகஜ வேட்டி என அனைத்து விதமான பார்ப்பன சாதி மேலாண்மை சின்னங்களோடு பல ஆயிரம் ஆண்டுகளாய் புனித பிம்பமாய் பார்ப்பனர் திட்டமிட்டு நிறுவியுள்ள சாதீய கட்டமைப்புகளின் உச்ச சின்னமான கோவிலில், பிற சாதியினர் நுழைய கூட அனுமதி இல்லாத கருவறையை மூன்றாம் தர விபச்சார விடுதியாக பயன்படுத்தியது ஒழுக்கமும், தூய்மையும் பிறப்பின் அடிப்படையில் விளைவதல்ல என்பதனை நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்கிறது.&lt;br /&gt;தந்தை பெரியார் சொல்கிறார்…&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும் தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானை பிராமணன் என்றோ, சாமி என்றோ , மேல் சாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான்- தந்தை பெரியார் (3-12-1971 விடுதலையில்..)&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பன, இந்து மதத்தின் உயிர் சின்னமான கடவுளர்களின் சிலைகளுக்கு முன்னால் தான் தேவநாதன் தன் லீலைகளை நடத்தி இருக்கிறான்.கல்லை எடுத்து, கற்றொளி கொண்டு..சிலை வடித்து, சிற்பம் செதுக்கி, ஆலயம் அமைத்து, கருவறை கட்டி..அந்த சிலையையும் தூக்கிக் கொண்டு நாம் உள்ளே கொண்டு போய் வைத்தால்..ஒரு சொம்பு தண்ணீரை கொண்டு குடமுழுக்கு நடத்தி கோவில் கட்டிய நம்மை வெளியே நிற்க வைத்து ..அழகு பார்த்த பார்ப்பனீய இந்து மத பிரதிநிதியான தேவநாதன் கடவுளை போற்றும் சிறப்பு இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதையெல்லாம் உணராத தமிழ்ச்சமூகம் கண்ணீர் மல்க கடவுள் பக்தியோடு கைக்கூப்பி நின்று கையேந்தி வரும் பார்ப்பான் தட்டில் காசு போட்டு கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தேவநாதன் ஒருவன் அல்ல. இவனைப் போல நாட்டில் ஏராளமான குருக்கள்,சாமியார் வகையறாக்கள் ஏராளம் உள்ளனர். இப்படி கேடு கெட்டவர்கள் கையால் தான் திருநீறு பூசிக் கொண்டு ,தமிழன் அலகு குத்தி காவடி தூக்கிக் கொண்டு திரிகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தீண்டதகாதவன் என்ற ஒற்றை காரணத்தினால் நந்தனை கோவிலுக்குள் அழைக்காத கடவுள் நந்தியை நகர்த்தி வைத்து தரிசனம் காட்டினாராம். நந்தியை நகர்த்த முடிந்த கடவுளுக்கு கூட சாதீயத்தினை உடைத்து நந்தனை கோவிலுக்குள் அழைக்க முடியவில்லை. கடவுள் கூட செய்ய முடியாத பிற சாதீயினரை கருவறைக்குள் நுழைவினை தேவநாதன் மிக எளிமையாக தன் காமத்திற்காக நிகழ்த்தி தன்னுடைய கேடு கெட்டத் தனம் கடவுளை விட உயர்ந்தது அல்ல என்பதனை நிருபித்து இருக்கிறான்.இதில் நாமும் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்.. தமிழனின் கருவறை நுழைவு இப்படி யாருக்கும் தெரியாமல் காமத்தின் பாற் கேடு கெட்டத்தனமாய் விளையாமல்..சாதிகளை துறந்த சமத்துவ நோக்கில் கலகம் வாய்ந்த புரட்சியாக நிகழ வேண்டும் என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தேவநாதனை விளக்குமாற்றால் அடிக்க பெண்கள் பாய்கிறார்கள். இதையெல்லாம் தனக்கு முன்னால் நிகழ்த்திக் கொண்டு இன்னும் கல்லாக சமைந்து நிற்கும் கடவுளின் சிலைகளை இவர்கள் எக்காலத்தில் எதனைக் கொண்டு அடிக்கப் போகிறார்கள்.?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியார் தன் வாழ்நாட்கள் முழுவதையும் தமிழர்களிடையே பிரச்சாரம் செய்து வந்ததை தேவநாத பார்ப்பான்கள் தங்கள் நடத்தைகள் மூலம் நிரூபித்து காட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வு மூலம் கோவில் ,சிலைகளின் எல்லையற்ற அதிகாரமும், புனிதமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.பார்ப்பன மேலாண்மையின் சீரழிவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பன லீலைகளை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டிய தேவநாதனுக்கு நாம் நன்றி சொல்வதோடு..இனியாவது பார்ப்பானிடம் ஏமாறாத சமூகம் தமிழ்ச் சமூகம் அமைய உறுதிக் கொள்வோம். &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;From&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;www.naamtamilar.org&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-2448776873386367719?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/2448776873386367719/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=2448776873386367719' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/2448776873386367719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/2448776873386367719'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2010/01/blog-post.html' title='காஞ்சிபுரம் பார்ப்பன குருக்களின் காமமும்- உடைத்தெறியப் பட்ட பார்ப்பனப் புனிதமும்…'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-3179798694574063816</id><published>2009-05-15T09:00:00.001-07:00</published><updated>2009-05-15T09:27:36.598-07:00</updated><title type='text'>நாம் என்ன செய்யப்போகிறோம்?</title><content type='html'>தீபத்தை ஏற்றுவது போல&lt;br /&gt;தீக்குண்டுகளை இயக்கி&lt;br /&gt;உடல் சிதறப் புறப்படும்&lt;br /&gt;பெண் பிள்ளைகளை&lt;br /&gt;எந்தச் சர்வாதிகாரம்&lt;br /&gt;வீழத்த முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;மொழி நில உரிமைகளில் நம்&lt;br /&gt;எருமைத்தனம் செய்த கேட்டைத்&lt;br /&gt;துடைக்கும் நாள் பக்கத்தில்&lt;br /&gt;கண்ணில் இருக்கிறது&lt;br /&gt;நண்பர்களே&lt;br /&gt;கனவு பலிக்கும் காலம். &lt;br /&gt;&lt;br /&gt;விண்ணை முட்டும் ஈழக்கொடி&lt;br /&gt;பகை மண்ணதிரப் பறக்கும்நாளில்&lt;br /&gt;வெட்கமற்று வந்துநிற்கும்  இந்தத் &lt;br /&gt;துரோகப்புழுக்கள் நம் தம்பியை&lt;br /&gt;உச்சி முகர்ந்து மெச்சிநிற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய துயர் பொழுதில்&lt;br /&gt;என்ன செய்யலாம்?&lt;br /&gt;நகங்களில் குருதி உறைந்திருக்க&lt;br /&gt;கண்களில் குழிகளே எஞ்சியிருக்க &lt;br /&gt;மலக்குடலில் ஈமொய்க்கும்&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தப்பிணங்களில், நம் பெண்கள்&lt;br /&gt;தன் வீட்டு ஆண்களைத் தேடிக்&lt;br /&gt;கண்டெடுத்துப் புதைக்கின்றன.&lt;br /&gt;வதைத்துத் சிதைக்கப்பட்டு&lt;br /&gt;சுருட்டிப் புதைக்கப்பட்ட&lt;br /&gt;காணாப் பிணமாகக்&lt;br /&gt;காதலியை  தாய்தங்கையை&lt;br /&gt;கண்டுகதறும் ஈழ மகனுக்கு&lt;br /&gt;உயிர் கூட மிச்சமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பயந்து பதறிப் புதைந்த குழந்தையின்&lt;br /&gt;பிஞ்சுப் பூங்குரல்&lt;br /&gt;மண்ணெங்கும் தேம்பியழ&lt;br /&gt;கொத்துக்குண்டுகளில் சிதறிய&lt;br /&gt;குடும்பமாய் நம்மவர்களின்&lt;br /&gt;சதைத் துண்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் என்ன செய்யலாம்?&lt;br /&gt;ஐயகோ ஐயகோ எனக் &lt;br /&gt;கக்கத்தில் இருப்பவர்க்குக்&lt;br /&gt;கடுதாசியும் தீர்மானமும்&lt;br /&gt;“சும்மாங்காச்சுக்கும்” என்ற&lt;br /&gt;பின்குறிப்போடு எழுதும் ஒருவரை&lt;br /&gt;உடன் பிறப்புகள் நம்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுவார்த்தை மூலம்தான்&lt;br /&gt;தீர்வென்று செல்லிவிட்டால் &lt;br /&gt;நடுவணரசு நீடூழி வாழ்கவெனப்&lt;br /&gt;புகழும் ஒருவரைத் தொழுபவர்களே!&lt;br /&gt;பேச்சுவார்த்தைக்கு உங்கள்&lt;br /&gt;மத்திய அரசு&lt;br /&gt;சோடா வாங்கி அணுப்புகிறதா&lt;br /&gt;ரேடார்தானே அணுப்புகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;பதவி ஆசையை மன்னிக்கலாம்&lt;br /&gt;நண்பர்களே!  உறவுகளே!&lt;br /&gt;நமது ஈழப் போராட்டத்தை&lt;br /&gt;ஆதரித்து ஒரு வார்த்தைபேச&lt;br /&gt;உடன் வந்து களம்நிற்க ;&lt;br /&gt;முதல்வரின் குடும்பத்&lt;br /&gt;துணைக்கண்டத்தில் ஒருவர் கூட&lt;br /&gt;இல்லையே உடன்பிறப்புகளே! &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச்சிக்கல்&lt;br /&gt;பதவிக்காலமற்ற நாளில் &lt;br /&gt;வந்திருக்கக்கூடாதா என&lt;br /&gt;இன்றைக்கு ஏங்கிவிட்டு  பிறகு&lt;br /&gt;நம்படைக்கு தலைமையேற்க வருவார்.&lt;br /&gt;உடன்பிறப்புகளே!&lt;br /&gt;&lt;br /&gt;பதவி ஆசை சரி இருக்கட்டும், &lt;br /&gt;தீக்குளித்த தங்கங்களும்&lt;br /&gt;தமிழகத்துக் கொந்தளிப்பும்&lt;br /&gt;செய்தியாகச் சொல்லவும்&lt;br /&gt;முதல்வரின் செய்தியலைவரிசைக்கு&lt;br /&gt;மனமில்லாமல் போனபின்னும்&lt;br /&gt;நம்பணுமா உடன்பிறப்புகளே?!&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்காலச் சாணக்கியத்தை&lt;br /&gt;ஒற்றைத் தீக்குச்சியாய்&lt;br /&gt;மோதியழித்த சுரும்புலியாய்&lt;br /&gt;முத்துக்குமரன் சிதைந்தானே புரியலையா?&lt;br /&gt;உங்கள் ரத்தம் கொதிக்கலையா?&lt;br /&gt;&lt;br /&gt;“போர் என்றால் சாவு விழும்&lt;br /&gt;தமிழர் சாவது சரியென்று பேசும்&lt;br /&gt;“பெண்” களங்கப் பிறப்பொன்றை&lt;br /&gt;இதயக்கனியின் இடத்தில் &lt;br /&gt;ஏற்றிவைத்த ரத்தங்களே&lt;br /&gt;உங்களுக்குச் சம்மதமா?&lt;br /&gt;&lt;br /&gt;நாய்துரத்த ஓடுகிறது குழந்தை&lt;br /&gt;நாயை அணைத்துக் கொஞ்சி&lt;br /&gt;குளிரூட்டிய மாளிகையில் அமர்ந்து&lt;br /&gt;கண்டிக்கிறார் குழந்தையை&lt;br /&gt;“கல்லைக் கீழே போடு குழந்தாய்&lt;br /&gt;அப்போதான் அம்மா நான்&lt;br /&gt;ஆதரவாய் வருவேன் என்று. &lt;br /&gt;அவரவர்கள் சாதித்துவிட்டார்கள்&lt;br /&gt;ஆயிரம் தலைமுறைக்கு &lt;br /&gt;அரச வாழ்க்கை கண்டுவிட்டார்&lt;br /&gt;ரத்தத்தின் ரத்தங்களே!&lt;br /&gt;உடன்பிறப்புகளே! நீங்கள்&lt;br /&gt;தொண்டராய் இருந்து&lt;br /&gt;என்ன சாதித்தீர்கள்??&lt;br /&gt;களத்திற்கு வாருங்களேன்&lt;br /&gt;கரம் சேர்த்து ஈழம் காக்க.&lt;br /&gt; &lt;br /&gt;“பிணங்களான பிறகும்&lt;br /&gt;புணர்ந்துபோகும் ராணுவநாயை&lt;br /&gt;எப்படியாவது கொன்றுபோடேன்”&lt;br /&gt;பெண்பிள்ளை அழுகுரல் &lt;br /&gt;உங்களுக்குக் கேக்கலையா?&lt;br /&gt;உயிர்வாழத்துடிக்கும்&lt;br /&gt;ஈழப் பிள்ளைகள்&lt;br /&gt;நம் உள்ளங்கையில்&lt;br /&gt;முகம்புதைத்து அழுவது&lt;br /&gt;கைகளில் கனக்கலையா?&lt;br /&gt;&lt;br /&gt;எங்களை அலற அலறவிட்டுச் &lt;br /&gt;சிதைத்தவரைப் பார்த்து&lt;br /&gt;தாய்த் தமிழகமே மொத்தமாய்&lt;br /&gt;மூச்சுவிடேன்  பற்றட்டும் நெருப்பென&lt;br /&gt;இளையோர் ரணங்கள் &lt;br /&gt;உங்கள் நெஞ்சில் தெறிக்கலையா?&lt;br /&gt;தங்கப் பூம்பாதம்&lt;br /&gt;தண்ணிபடக் கொப்பளிக்கும்&lt;br /&gt;பிஞ்சுக் குழந்தைகள்&lt;br /&gt;வெடித்துச் சிதறக் கண்டும்&lt;br /&gt;தொண்டுசெய்து தொண்டுசெய்தே&lt;br /&gt;உணர்ச்சியற்றுப் போனீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;கரம்கோர்த்து ஈழம்காக்க&lt;br /&gt;களத்திற்கு வாருங்களேன்&lt;br /&gt;இதயத்துத் தமனிகளே&lt;br /&gt;இனமானச் சொந்தங்களே&lt;br /&gt;நாம் என்ன செய்யப்போகிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று லட்சம் சொந்தங்கள்&lt;br /&gt;மரணக் குழியில் மயங்க&lt;br /&gt;இத்தாலியப் பெண்ணை&lt;br /&gt;அன்னையென்று  மலர்தூவி&lt;br /&gt;தொப்பூழ்கொடி உறவுகளின் &lt;br /&gt;இழவிற்கு  மகிழ்பவர்களை&lt;br /&gt;நாம் என்ன செய்யப்போகிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;இனமே அழியட்டும்&lt;br /&gt;கூரைமாற்ற உதவுவோம் என்பவர்&lt;br /&gt;வேண்டுதல் குருடர்கள்&lt;br /&gt;கண்திறக்க மறுப்பவர்கள்&lt;br /&gt;வீம்பிற்குச் சிங்களரின் &lt;br /&gt;பாதம் நக்கிச் சிரிப்பவரின்&lt;br /&gt;புறம் கழுவும் பூசாரிகளாய்&lt;br /&gt;இங்கே  கதர்வேட்டிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;186 பேர்சுடப்பட்டதற்காக&lt;br /&gt;மாதக்கணக்காய் அலறுகிறார்&lt;br /&gt;கழிவறையில் இருக்கும்போதும்&lt;br /&gt;கண்டித்தபடியே இருக்கிறார். &lt;br /&gt;பிரான்சு அதிபரிடம்&lt;br /&gt;சீக்கிய டர்பனிற்காக&lt;br /&gt;உருகிவேண்டும் ஒருவருக்கு&lt;br /&gt;தமிழர் மரணஓலம்&lt;br /&gt;மகிழ்ச்சியாய்ப்படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதத்தைக் கீழேபோட்டால்&lt;br /&gt;அமைதிபேசுவோம் என்னும் &lt;br /&gt;அறிவாளிகளே!&lt;br /&gt;தமிழக மீனவன் எந்த &lt;br /&gt;ஆயுதம் கொண்டு மீன்பிடிக்கிறானாம்?&lt;br /&gt;அதுசரி நீங்கள் &lt;br /&gt;கோஷ்டிச் சண்டையைக் கீழே&lt;br /&gt;போட்டதுண்டா? போட்டுத்தான்&lt;br /&gt;வாக்குக்கேட்டு வருகிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;முதுகெலும்பே இல்லாதவர்&lt;br /&gt;முதுகில் வலியென்றும்&lt;br /&gt;இருதயமே இல்லாதவர்&lt;br /&gt;இருதய அறுவை என்றும்&lt;br /&gt;ஒருசேரச் சொல்வதுதான்&lt;br /&gt;நடுகல்லும் சிரிக்கும் அதிசயம்.&lt;br /&gt;ஆயுதங்களைப் பார்த்துப்பேச&lt;br /&gt;தைரியம் அற்றவர்கள்&lt;br /&gt;கவசங்களைக் கழற்றச்சொல்லி &lt;br /&gt;கத்திக் கொண்டிருக்கிறார்கள்&lt;br /&gt;முப்பத்தைந்து வருசமாக.&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்துத் தமனிகளே&lt;br /&gt;இனமானச் சொந்தங்களே&lt;br /&gt;கோரிக்கைகள் யாரைநோக்கிக்&lt;br /&gt;கேட்கப்படுகிறதோ  அதுதான்&lt;br /&gt;வெற்றிதோல்வியைத்&lt;br /&gt;தீர்மானிக்கும்  நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;எவர் வாயிலிருந்து நமது&lt;br /&gt;ரத்தமும் சதையும் வழிகிறதோ,&lt;br /&gt;குட்டிமனியின் கண்கள்&lt;br /&gt;வெறித்து விழிக்கிறதோ&lt;br /&gt;அவர்களிடம் கேட்கிறோம்  நாம்&lt;br /&gt;போர்நிறுத்தத்தை  ஈழத்தை. &lt;br /&gt;&lt;br /&gt;சட்டக்கல்லூரிச் சண்டையை&lt;br /&gt;தடுக்க நினைக்காதவர்களா&lt;br /&gt;இலங்கைச் சண்டையை&lt;br /&gt;நிறுத்தப் போகிறார்கள்?&lt;br /&gt;செத்துக் கொண்டிருக்கும்&lt;br /&gt;இந்தியத் தமிழனைக் காப்பாற்றாத அரசா&lt;br /&gt;இலங்கைத்தமிழரைக் காக்கப்போகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இறையாண்மை என்னும்&lt;br /&gt;யோக்யதை இல்லாதவர்&lt;br /&gt;இன்னொருவன் இறையாண்மைபற்றி&lt;br /&gt;இங்கேதான் பேசுகிறார் சொந்தங்களே!&lt;br /&gt;தன்னாட்டுக் கடைசி மனிதரையும்&lt;br /&gt;காப்பாற்றுவது இறையாண்மை&lt;br /&gt;மும்பையில் நீ முட்டாளானதை&lt;br /&gt;உலகம் கண்டு கொண்டது.&lt;br /&gt;தமிழகக் கடற்கறையில் நீ&lt;br /&gt;தெரிந்தே பெட்டையாய் நிற்கிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களன் இயக்கும் துப்பாக்கிகள்&lt;br /&gt;இந்திய இறையாண்மையைக் &lt;br /&gt;கிழித்து நிர்வாணமாக்குவதை&lt;br /&gt;ரசிக்கும் மேதைகள் நீங்கள்;&lt;br /&gt;தேச உணர்வோடு சர்வாங்கமும்&lt;br /&gt;கூசும்பேதைகள் நாங்கள்&lt;br /&gt;நான் சொல்லவில்லை  தமிழனின்&lt;br /&gt;வாயாம் சீமான் சொல்லவில்லை.&lt;br /&gt;சிங்களக் கடற்படைக்கூலியாளும்&lt;br /&gt;காசுக்கு மாரடிக்கக் &lt;br /&gt;கப்பலில் வந்தவனும்&lt;br /&gt;கைகொட்டிச் சிரிக்கிறார்கள்&lt;br /&gt;காங்கிரஸ் கெடுத்த இறையாண்மையை&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்துத் தமனிகளாய்&lt;br /&gt;கரம் கோர்த்துத் துணைநிற்கும்&lt;br /&gt;இனமானச் சொந்தங்களே!&lt;br /&gt;ஒரு நாய்க்கு நாம்&lt;br /&gt;வாக்களித்திருந்தாலும்  அது&lt;br /&gt;நமக்காகக் குரைத்திருக்கும்; நமை&lt;br /&gt;விரல்நீட்டினாலே கடித்திருக்கும். &lt;br /&gt;போட்டா நாய் வாயில்&lt;br /&gt;போடா விட்டால் பேய்வாயில் என&lt;br /&gt;விட்டேத்தியாய் நாம் செய்தபாவம்&lt;br /&gt;நம்தலையில் மட்டுமின்றி&lt;br /&gt;ஈழத்தலையிலும் வெடிக்கிறதே, &lt;br /&gt;நாம் ஏற்றிவைத்த நாற்காலிப்புழுக்கள்&lt;br /&gt;நமக்காகத்துடிக்கும் நல்லாரையும் &lt;br /&gt;பிரித்துவைத்துக் கெடுக்கிறதே&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றுகட்சித் தொண்டர்களே!&lt;br /&gt;நம்பிக்கிடக்கும் நல்லவர்களே!&lt;br /&gt;இன்றைய தமிழகத்தில்&lt;br /&gt;தேசியம் பேசும் தமிழன்&lt;br /&gt;ஒருவன் முட்டாள்&lt;br /&gt;இன்னொருவன்&lt;br /&gt;பத்துக்கோடித் தமிழருக்கும்&lt;br /&gt;பச்சைத் துரோகி.&lt;br /&gt;&lt;br /&gt;ஓங்கியயழுந்த போராட்டமும்&lt;br /&gt;ஆறுமாத வேதனையும் &lt;br /&gt;எந்தச் சாவையும் தடுக்கவில்லை&lt;br /&gt;தமிழன் ஒருவனைக் காக்கவில்லை.&lt;br /&gt;குப்பிகடிக்கும் போராளி&lt;br /&gt;ரவையின்முன்பு வயசுப்பிள்ளை&lt;br /&gt;பதுங்கு குழியில் சிறுபிள்ளை&lt;br /&gt;ரத்தஉறவு நாதியற்றுக் கிடக்க ;&lt;br /&gt;ஆயுதமாய் கவசமாய்&lt;br /&gt;நம்குரல்கள் மாறலையே!&lt;br /&gt;&lt;br /&gt;துண்டுபட்ட கையை&lt;br /&gt;நாயிழுக்குமென&lt;br /&gt;தானெடுத்துப் புதைத்துவிட்டு&lt;br /&gt;ஓலமிட்டு அழும்பிள்ளைகள்.&lt;br /&gt;உங்கள் பிள்ளைகள்&lt;br /&gt;உங்கள் வீட்டுப்&lt;br /&gt;பெண்களுக்கு எவனோ&lt;br /&gt;கருக்கலைப்புச் செய்கிறான்&lt;br /&gt;என்ன செய்யப் போகிறீர்கள்?!&lt;br /&gt;&lt;br /&gt;ஈழக்கொடி மக்கள் காக்க&lt;br /&gt;இவனைப் போகவைக்கணும்&lt;br /&gt;சேருங்கள் சொந்தங்களே!&lt;br /&gt;நமக்கான எண்ணங்களோடு&lt;br /&gt;நமக்கான உரிமைக்குரலோடு&lt;br /&gt;எந்த இடியாலும் அசைக்கமுடியாத&lt;br /&gt;சுரணையற்ற மக்களுக்கான&lt;br /&gt;அக்கறையோடும் ;&lt;br /&gt;கொந்தளிக்கும் முத்துக் குமரன்களை&lt;br /&gt;தேடிச்சேருங்கள் நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;எவனெவனின் உள்ளாடைகளையும்&lt;br /&gt;ஏந்திக்கிடக்கும்  நமது&lt;br /&gt;இளைய போர்வாள்களைத்&lt;br /&gt;துடைத்து எழுப்புங்கள் உறவுகளே!&lt;br /&gt;பதுங்கு குழிக்குள்&lt;br /&gt;தொலைக்காட்சி வைக்கப்படும்&lt;br /&gt;போரின் சத்தத்திலிருந்து&lt;br /&gt;மக்களைக்காக்க இலவசப் &lt;br /&gt;பஞ்சும் பாட்டுப்பாடும். &lt;br /&gt;&lt;br /&gt;குண்டுவிழும் வைத்தியசாலையில்&lt;br /&gt;இலவச உணவும்&lt;br /&gt;இறந்தவர் குடும்பத்திற்கு  என்&lt;br /&gt;சொந்தப் பணத்திலிருந்து&lt;br /&gt;இழவுக் காசும் வழங்கப்படும் என&lt;br /&gt;தீர்வுத் திட்டங்கள் &lt;br /&gt;முன்வைக்கப்படும் முன்பு ;&lt;br /&gt;முத்துக்குமரன்களைத்&lt;br /&gt;தேடிச் சேருங்கள் நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;கட்டியழ நாதியற்ற கூட்டமானோம்;&lt;br /&gt;தொட்டுத்தூக்க மக்களற்ற பிணங்களானோம்&lt;br /&gt;எத்திச்செல்லும் நாட்டில்  உசிரு&lt;br /&gt;பத்திச்சாவுது மொத்தமா  அதத் &lt;br /&gt;தடுக்கப்பார்த்தும் ஏலாமத்தான்&lt;br /&gt;வதைபடுறோம் மிச்சமா?&lt;br /&gt;&lt;br /&gt;பேரணியா நாமநின்னா&lt;br /&gt;மாட்டுமந்தன்னு தள்ளுரான்&lt;br /&gt;உரிமைகேட்டு உயர்த்தும் குரலை&lt;br /&gt;தாலாட்டுன்னு தூங்குறான். &lt;br /&gt;முட்டித்தூக்கும் கொம்புகளையே&lt;br /&gt;சுகமெனச் சொரியும் நோயாளி இவன&lt;br /&gt;எளிய சனமும் அலறச்செய்யனும்&lt;br /&gt;வழிகண்டு நாம போராடணும்.&lt;br /&gt;&lt;br /&gt;யுகங்களைத் தின்று கடற்கோளைப்&lt;br /&gt;புறந்தள்ளித் தகித்தோடும்&lt;br /&gt;காட்டாறு நம் தமிழ்ரத்தம் &lt;br /&gt;அதில் ஒரு சொட்டு உலகில்&lt;br /&gt;மிச்சமுள்ள வரையில்&lt;br /&gt;தோற்காது நமது போராட்டம். &lt;br /&gt;எல்லாப் பகையும்&lt;br /&gt;பொல்லாத் துரோகமும்  நம்&lt;br /&gt;செருப்பினுள் மிதிப்பட்டுக் கிடக்கணும்.&lt;br /&gt;நல்லது கெட்டது நாலும் தெரிந்த&lt;br /&gt;போராளியாய் பிள்ளை வளர்க்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டியழச் சொந்தமுண்டு&lt;br /&gt;தொட்டுத்தூக்க மக்களுண்டு&lt;br /&gt;விதைகுழியில் விழுந்ததெல்லாம்&lt;br /&gt;விருட்சமாக்கும் (தமிழ்) மண்ணுண்டு&lt;br /&gt;பிரச்சனை எதுவும் தீரக்கூடாதென்னும்&lt;br /&gt;ஒற்றைப் புள்ளியில் அரசியல். அதில்&lt;br /&gt;மாட்டிக் கொண்டவர் தடம்மாறலாம்.&lt;br /&gt;நம்மைநாமே காத்து நிற்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;தயவு செய்து ஒற்றுமையாய்&lt;br /&gt;ஈழம் காக்க நில்லுங்கள் &lt;br /&gt;துரோகக் கட்சிகளைத்&lt;br /&gt;தீர்த்துக் கட்ட&lt;br /&gt;இணைந்து நில்லுங்கள்!&lt;br /&gt;  -&lt;strong&gt; கலை இலக்கியா&lt;/strong&gt;&lt;br /&gt;-தேனியில் நடைபெற்ற “&lt;strong&gt;ஈழத்துயரமும் தீர்வும்&lt;/strong&gt;” பாவரங்கத்தில் (கவியரங்கம்) படிக்கப்பட்ட பா இது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-3179798694574063816?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/3179798694574063816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=3179798694574063816' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/3179798694574063816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/3179798694574063816'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2009/05/blog-post.html' title='நாம் என்ன செய்யப்போகிறோம்?'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-2251976977938909363</id><published>2009-04-28T09:37:00.001-07:00</published><updated>2009-04-28T09:56:48.850-07:00</updated><title type='text'>கேக்குரவன் கேனயனாக இருந்தால்.............</title><content type='html'>&lt;strong&gt;www.tamilnathy.blogspot.com&lt;/strong&gt;  வலைப்பதிவில் இக்கட்டுரையினை எழுதியவர் &lt;strong&gt;தோழர் தமிழ்நதி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல்வாதிகள் காட்டும் செப்படிவித்தைகள் தாங்கமுடியவில்லை. கரணம் அடிக்கிறார்கள். கயிற்றில் நடக்கிறார்கள். நெருப்பு வளையத்துக்குள் பாய்கிறார்கள். சித்திரக்குள்ளர்களாகி சிரிப்பு மூட்டுகிறார்கள். காற்றில் கைவீசி பூ வரவழைத்துக் கொடுக்கிறார்கள். கட்டப்பொம்மனாகி மீசை துடிக்கப் பேசுகிறார்கள். ஜான்சிராணியாகி வாளை வீசுகிறார்கள். பெவிலியனில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் வளர்ந்த குழந்தைகள் கைதட்டிக் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதறியாமல் நாடகங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;   பார்வையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த உச்சக்கட்ட நிகழ்ச்சி நேற்று அரங்கேறி முடிந்தது. ‘உலகத் தமிழர்களின் உன்னதத் தலைவர்’கலைஞர் கருணாநிதி அவர்கள், இலங்கைத் தமிழருக்காக ‘உண்ணாவிரதம்’ இருந்ததுதான் கலையிரவிற்கே மகுடம் வைத்த நிகழ்ச்சி. ‘&lt;strong&gt;ஓட்டுக்காக உடம்பிலிருக்கும் கடைசித் துணிவரை கழற்றிப்போடுவதென்று சங்கற்பம் செய்துவிட்டார்களா என்ன!’ என்று வியக்கத் தோன்றுகிறது.&lt;/strong&gt;ஈழத்தில் எத்தனை எத்தனைக் குழந்தைகள் சிதறு தேங்காய்போல தலைசிதறிச் செத்தார்கள். கர்ப்பத்தினுள்ளிருந்த குழந்தைகூட காயப்பட்டது. பசியில் சிறிதுசிறிதாக மாண்டுமடிந்தவர்கள் எத்தனை பேர். எலும்பும் தசையும் குருதியுமாய் பிரிந்து கூழாகித் தரையோடு தரையாக வழிந்தோடிய உடல்கள் எத்தனை. ‘ஐயோ ஐயோ’வென்று உயிர்பதறி காடுகளில் அலைந்து பித்தாகிப் பிதற்றியழுதன எமது சொந்தங்கள். கட்டிடங்களின் இடிபாடுகளுள் கிடந்து ‘காப்பாற்றுங்கள்’என்று கத்தி கடைசிநம்பிக்கையும் வற்றி வான்பார்த்து உறைந்த கண்கள் எத்தனை.. சொல்லொணா, எழுதவொண்ணாக் கொடுமைகளை எங்கள் சகோதரர்கள் அனுபவித்தபோதெல்லாம், &lt;strong&gt;கண்ணப்பநாயனார் சிவபெருமானைக் கட்டிக்கொண்டிருந்ததைப் போல இரவும்பகலும் நாற்காலியைக் இறுக்கிக் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் இன்றைக்கு உண்ணாவிரதம் இருக்கிறார்களாம்!&lt;/strong&gt; &lt;strong&gt;கொன்று பாடையேற்றிவிட்டு ஊர்வலத்தில் மலர்தூவுவதுபோலிருக்கிறது இந்தப் படுபாதகச் செயல்!&lt;/strong&gt;&lt;br /&gt;இன்று தினந்தந்தியில் வெளியாகியிருக்கும் தலைப்புச் செய்தி இதுதான்: “மத்திய அரசின் கோரிக்கையை ராஜபக்சே ஏற்றார் . கருணாநிதி உண்ணாவிரதம் வெற்றி... போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அறிவிப்பு”&lt;br /&gt;போதாக்குறைக்கு, ‘இலங்கையைப் பணியவைத்த உண்ணாவிரதம்’என்ற தலைப்புடன் கலைஞர் களைத்துப்போய் படுத்திருப்பதான ‘பரிதாபகரமான’புகைப்படங்கள் ஒரு முழுப்பக்கத்தில் வெளியாகியிருந்தன.&lt;br /&gt;இந்த &lt;strong&gt;நூற்றாண்டின் தலைசிறந்த நாடகமாக இது அறிவிக்கப்படவேண்டும். இலங்கை அரசு - இந்திய மத்திய அரசு – தமிழக மாநில அரசு என்ற மூன்று அரசுகள் இணைந்து நடத்திய நாடகம் நன்றாகத்தானிருக்கிறது.&lt;/strong&gt; ‘நான் அடிக்கிறது போல அடிக்கிறேன்.. நீ ங்கா ங்கா என்று சத்தமிட்டு அழு’என்று சொல்லிவைத்து எல்லாம் நடப்பதை அறிந்தவர் அறிவர். இந்திய அரசு ஆயுதமும் ஆட்படையும் கொடுத்து இலங்கையில் போரை நடத்துகிறது. அதே இந்திய அரசு போரை நிறுத்தச் சொல்லி ராஜபக்சேயைக் கேட்பதற்காக கொழும்புக்குத் தன் பிரதிநிதிகளை அனுப்புகிறது. ‘நான் ஒரு விசயம் தீர்மானிச்சுட்டா அப்புறம் என் பேச்சையே நான் கேக்க மாட்டேன்’என்று போக்கிரியில் விஜய் வசனம் பேசியது நினைவில் வந்து தொலைத்தது. &lt;strong&gt;தானே நடத்தும் போரை நிறுத்த, தானே கொழும்புக்குப் போகும் வேடிக்கை வேறெங்கும் நடப்பதற்குச் சாத்தியமில்லை&lt;/strong&gt;. இதைத்தான் ‘&lt;strong&gt;கேக்கிறவன் கேனையனாக இருந்தால் எருது ஏரோப்ளேன் ஓட்டுமாம்’என்று சொல்வார்கள். மக்களெல்லாம் &lt;/strong&gt;முட்டாள்கள், வடிகட்டிய அசடுகள், மகா மறதிக்காரர்கள் என்ற நம்பிக்கையில்லாமலா இதுவெல்லாம் நடக்கிறது?&lt;br /&gt;தேர்தல் குறிகாட்டி அ.தி.மு.க.பக்கம் திரும்பவாரம்பித்துவிட்டது என்ற பயத்தின் விளைவே உண்ணாவிரதம் என்ற உச்சக்கட்டக் காட்சிக்குக் கலைஞரை உந்தித்தள்ளியது. கடைசி ஆட்டத்தையும் ஆடிப்பார்த்தாகிவிட்டது. (இவர்களைச் சொல்லமுடியாது. இதற்கு மேல்கூட நகைச்சுவைக் காட்சிகள் இருக்கக்கூடும்.) மாநில அரசாங்கத்தின் முண்டுகொடுப்பு இல்லாமல் போனால் மத்திய அரசு கவலைக்கிடமாகிவிடும் என்பது யாவரும் அறிந்ததே. இவர் அவர்களைக் கிண்டினார். ‘அன்னை’சோனியாவும், மதிப்பிற்குரிய மன்மோகன்சிங்கும் ராஜபக்சேவைக் கூப்பிட்டு ‘நிறுத்துகிற மாதிரி நடி. தேர்தலுக்குப் பிறகு அடி’என்றார்கள். ‘அப்படியே ஆகட்டும். கனரக ஆயுதங்களால் அடிக்கவில்லை. சுட்டே கொன்றுவிடுகிறேன்’என்றிருக்கிறார் ராஜபக்சே. அதாவது, ‘கத்தியால் குத்தினால்தானே காயம் வரும்; நஞ்சுவைத்துக் கொல்கிறேன்’ என்று ஒப்புதல் அளித்திருக்கிறார் இலங்கையின் அதிமேன்மை பொருந்திய ஜனாதிபதி அவர்கள். (துப்பினால் எச்சில் வீணாகிவிடும்)&lt;br /&gt;நேற்று ‘கலைஞர்’செய்தியில் அருமையான காட்சிகளைக் காணமுடிந்தது. பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைக்கிறார் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, கவிஞர் கனிமொழியும், தளபதி ஸ்டாலினும் கவலையோடு தந்தையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ராஜாத்தி அம்மாளும் தயாளு அம்மாளும் அருகிலிருக்கிறார்கள். கலாநிதி, தயாநிதி மாறன்கள் ‘இந்த மட்டில் பிழைத்தீர்களே’என்று ஆற்றாமை பொங்க அருகில் நிற்கிறார்கள். இயக்குநர் பாலச்சந்தர், கவிஞர் வாலி கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். ‘எங்க குல சாமி நீங்க’என்று வழக்கம்போல வைரமுத்து வந்து நிற்கிறார். சுப.வீரபாண்டியன் (நீங்களுமா…?) ‘சாதித்துவிட்டீர்கள் ஐயா’என்பதான புன்னகையோடு ஓரத்தில் நிற்கிறார். ‘எங்களையெல்லாம் பார்த்தால் அவ்வளவு கேனையன்களாகவா தெரிகிறது?’என்று கேட்கவேண்டிய மக்களில் ஒரு பகுதி கலைஞரைப் பார்க்க அலைமோதுகிறது. &lt;br /&gt;ஆக, கலைஞரின் உண்ணாவிரதத்தினால் இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றொரு பிம்பத்தை மக்கள் மனதில் ஓரளவிற்கேனும் கட்டமைப்பதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். &lt;strong&gt;ஆட்சியிலிருப்பவரின் அரைநாள் பட்டினிக்கே இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்துமளவிற்கு வலிமை இருக்கிறதென்றால் அதை ஏன் முன்னமே செய்யவில்லை? ஆயிரக்கணக்கான மக்கள் செத்துமடிந்தபின், இலட்சக்கணக்கானவர்கள் கண்ணீர் சிந்திச் சாபமிட்டதன் பின் உண்ணாவிரதம் இருக்கவேண்டியதன் அவசியந்தான் என்ன? அப்படியென்றால் ஈழத்தமிழர்களின் இனவழிப்பில் கலைஞருக்கும் பங்கிருக்கிறது. கொலைகளைத் தடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தும், கைகட்டி, கால்பிடித்துப் பார்த்திருப்பதும் கொலைசெய்தலுக்கு ஈடான குற்றந்தான்.&lt;/strong&gt;அமெரிக்கா மறைமுகமாக அச்சுறுத்திவிட்டது. ஐரோப்பிய நாடுகள் இனவழிப்பைக் கண்டித்து தமது பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பவாரம்பித்திருக்கின்றன. மத்தியில் அரசு சரிந்துவிடும் என்பதோடு, இலங்கைப் பிரச்சனையில் அமெரிக்கா மூக்கை நுழைத்தால் இந்தியாவின் இறைமை என்னாவது? என்ற கிலி இந்தியாவைச் சூழவாரம்பித்திருக்கிறது. ‘இந்த அடி அடிக்கிறான் என்னய்யா பாத்துக்கிட்டிருக்கே’என்று அமெரிக்கா புருவம் தூக்குவது இந்தியாவின் இந்துசமுத்திரப் பொலிஸ்காரன் சீருடைக்கு ஏற்புடையதன்று. &lt;br /&gt;‘கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்ததாம்’, ‘குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை’போன்ற பழமொழிகளை இங்கே நினைவுகூர்தல் நன்று.&lt;br /&gt;பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தலைமையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் பல்வேறு வகையான போராட்டங்களை ஈழத்தில் போரை நிறுத்தும்படியாகக் கேட்டு நடத்திவருகிறது. சூழ்ச்சிக்கு அஞ்சி கட்சிமாறிய வைக்கோ அன்றிலிருந்து இன்றுவரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, ஈழத்திற்கு ஆதரவாகவே பேசிவருகிறார். மத்தியும் மாநிலமும் ஆட்டம் காணும் என்றறிந்ததும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்ட மருத்துவர் ராமதாஸ் சுயநலத்துடன்கூடிய பொதுநலவாதியாக மாறியிருப்பதும் மகிழ்ச்சியே. ஓட்டுக்காக என்றாலும், ‘சாமியா பேசுவது’என்று யாவரும் வியந்து பார்க்கும்படியாக ஈழ ஆதரவுக் கருத்துக்களை நாளாந்தம் உதிர்த்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா அவர்களின் குரலுக்கு இன்றைய சூழலில் மரியாதை இருக்கவே இருக்கிறது. தன்னுடலில் மூட்டிய தீயால் இலட்சக்கணக்கான தமிழகத்தாரின் இதயங்களில் விழிப்பு என்ற சுடரை ஏற்றிவைத்துப்போன முத்துக்குமார், அவன் வழியில் தம்முயிரை ஈகம் செய்த ஏனையோர், &lt;strong&gt;‘எங்கள் இரத்தமய்யா… எங்கள் இரத்தம்…’ என்று ஊர்வலங்களையும் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் நடத்திக்கொண்டிருக்கும் தமிழக சகோதரர்கள், உண்ணாவிரதம் இருக்க அரசு இடமளிக்காதபோது அலைந்து திரிந்து, ‘தாயகத்தில்’பதினொரு நாட்கள் பசித்துக் கிடந்த பேராசிரியர் சரஸ்வதி உள்ளிட்ட மனிதாபிமானமுள்ள பெண்கள், எப்போதும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுக்கும் கவிஞர்கள் தாமரை, அறிவுமதி, சிறைசென்ற சீமான், அமீர், கொளத்தூர் மணி, சம்பத், விருதைத் திருப்பியளித்த பாரதிராஜா, திரைத்துறையினர், பிரான்ஸ், கனடா, இலண்டன் எனத் தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் ‘எங்கள் சொந்தங்களைக் காப்பாற்றுங்கள்’என்று அவ்வந் நாடுகளின் ஆட்சியலுவலகங்களின் முன் தொடர்போராட்டங்களை நடத்திவந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோருடைய உணர்வுகளின் மீதும், தியாகங்களின் மீதும் மலத்தில் தோய்த்தெடுத்த செருப்பால் அடித்தது போலிருக்கிறது ‘கலைஞரின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிப்பு’என்ற செய்தி. &lt;/strong&gt;&lt;em&gt;&lt;strong&gt;மேலே பட்டியலிடப்பட்டிருப்பவர்கள் ஒன்றுமே செய்யவில்லை; கலைஞரின் அரைநாள் பட்டினிதான் அவ்வளவு பெரிய விடயத்தைச் சாதித்திருக்கிறது என்பது எத்தனை பெரிய கயமைத்தனமானது.&lt;/strong&gt;&lt;/em&gt; இப்படியெல்லாம் நடக்கக்கூடுமெனில், எருது ஏரோப்ளேன் ஓட்டுவதொன்றும் ஆச்சரியமில்லை.&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;வெயிலைவிடக் கொடுமையாக எரிக்கிறது பிணங்களின் மீது அரசியல் செய்பவர்களின் வார்த்தைகள்&lt;/strong&gt;&lt;/em&gt;. &lt;br /&gt;     &lt;blockquote&gt;&lt;strong&gt; ‘மக்கள் இனியும் முட்டாள்கள் இல்லை’என்பதைத் தேர்தல்முடிவுகள்தான் தெளிவுபடுத்தவேண்டும்&lt;/strong&gt;&lt;/blockquote&gt;. எல்லா அற்பத்தனங்களையும், கயமைகளையும், தகிடுதத்தங்களையும் பார்த்துக்கொண்டிருக்கும் வரலாறு பாடம் கற்பிக்கிறதோ இல்லையோ, மத்திய, மாநில அரசுகளுக்கு ராஜபக்சே பாடம் கற்பிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-2251976977938909363?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/2251976977938909363/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=2251976977938909363' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/2251976977938909363'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/2251976977938909363'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2009/04/blog-post.html' title='கேக்குரவன் கேனயனாக இருந்தால்.............'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-5833581688434294523</id><published>2009-02-21T09:41:00.000-08:00</published><updated>2009-02-21T09:55:37.004-08:00</updated><title type='text'>வெள்ளைக்காரன் பெத்துப்போட்ட...</title><content type='html'>பாடல்-பண் :    &lt;em&gt;&lt;strong&gt;தலித் சுப்பையா &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;பல்லவி   :     வெள்ளைக்காரன் பெத்துப்போட்ட கள்ளப்பிள்ளை காங்கிரசு &lt;br /&gt;&lt;br /&gt;             இத்தாலிப்  பெண்மணியின் ஏவல்படையாய் மாறிப்போச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;அ.பல்லவி :     ஊருக்கு நாளுபேரு கணக்குங்க - சும்மா &lt;br /&gt;&lt;br /&gt;             பேருக்கு காங்கிரசு இருக்குங்க.    (வெள்ளை) &lt;br /&gt;&lt;br /&gt;சரணம் 1   :     காமராசர் செல்வாக்குல ஆண்டது - பிறகு &lt;br /&gt;&lt;br /&gt;              கழுதை தேஞ்சு கட்டெறும்பா ஆனது &lt;br /&gt;&lt;br /&gt;              குருடனுக்கு ராசபார்வை கிடைக்குமா - கை &lt;br /&gt;&lt;br /&gt;              தமிழகத்தை ஆளும்கனவு பலிக்குமா    (வெள்ளை) &lt;br /&gt;&lt;br /&gt;சரணம் 2   :      அரசியலில் காங்கிரசு சாக்கடை - இரு &lt;br /&gt;&lt;br /&gt;              கரைகளாக கழகங்கள் வெளிப்படை &lt;br /&gt;&lt;br /&gt;               மாறி மாறி பிச்சைவாங்கி செயிக்குது - இதில் &lt;br /&gt;&lt;br /&gt;               மான ஈனம் ஏதுமின்றி குரைக்குது!     (வெள்ளை) &lt;br /&gt;&lt;br /&gt;சரணம் 3   :      கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது - நம் &lt;br /&gt;&lt;br /&gt;               கடல்மக்கள் உரிமைகளை பறிச்சது &lt;br /&gt;&lt;br /&gt;               சிங்களப்படை மீனவரை கொல்லுது - இதை &lt;br /&gt;&lt;br /&gt;               தடுத்துநிறுத்தத் துப்பில்லாமல் மழுப்புது  (வெள்ளை) &lt;br /&gt;&lt;br /&gt;சரணம் 4   :       அழிவுப்படை ஈழத்துக்கு போனது - அங்கு &lt;br /&gt;&lt;br /&gt;                அடிபட்டு அசிங்கப்பட்டு மீண்டது &lt;br /&gt;&lt;br /&gt;                எறிந்தபந்து எதிர்த்திசையைத் தாக்குமே - அதைத் &lt;br /&gt;&lt;br /&gt;                தமிழகத்தில் நாமெல்லோரும் பார்த்தோமே.   (வெள்ளை) &lt;br /&gt;&lt;br /&gt;சரணம் 5    :       தமிழ்ஈழ விடுதலையைத் தடுக்குது - அதன் &lt;br /&gt;&lt;br /&gt;                தலைவரையே கொன்றுவிடத் துடிக்குது &lt;br /&gt;&lt;br /&gt;                இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்குது - தமிழரை &lt;br /&gt;&lt;br /&gt;                இளிச்சவாயர் கூட்டமென்று நினைக்குது.     (வெள்ளை) &lt;br /&gt;&lt;br /&gt;சரணம் 6   :        புலிகளை அழித்துவிடத் துடிக்குது - அவர்தம் &lt;br /&gt;&lt;br /&gt;                தடயமறிய ராடர்களை கொடுக்குது &lt;br /&gt;&lt;br /&gt;                படையனுப்பி பயிற்சிதந்து அழிக்குது - மூன்று &lt;br /&gt;&lt;br /&gt;                மலையாளிகள் பொறுப்பில்இது நடக்குது (வெள்ளை) &lt;br /&gt;&lt;br /&gt;சரணம் 7   :        சட்டமன்றத் தீர்மானத்தை மதிச்சதா - அதை &lt;br /&gt;&lt;br /&gt;                சலூன்கடை தாள்என்று நினைக்குதா &lt;br /&gt;&lt;br /&gt;                மனிதச்சங்கிலி லட்சம்பேரு நடத்துனோம் - எந்தப் &lt;br /&gt;&lt;br /&gt;                பலனுமின்றி தமிழினமே தவிக்கிறோம். (வெள்ளை) &lt;br /&gt;&lt;br /&gt;சரணம் 8  :         பாக்கிஸ்தானைப் பிரித்துத் தந்தார் தாத்தனார் &lt;br /&gt;&lt;br /&gt;                பங்களா தேசுக்கு காரணமே மாமியார் &lt;br /&gt;&lt;br /&gt;                ஈழத்தமிழர் அழிப்பைச் செய்தார் கணவரு - அந்த &lt;br /&gt;&lt;br /&gt;                இரண்டகத்தை சோனியாவும் செய்கிறார்.     (வெள்ளை) &lt;br /&gt;&lt;br /&gt;சரணம் 9  :         காங்கிரசை ஒழிக்கச்சொன்னார் பெரியாரு - அந்தக் &lt;br /&gt;&lt;br /&gt;                கடனடைக்க களமாடுது தமிழ்நாடு &lt;br /&gt;&lt;br /&gt;                தமிழ்ஈழம் மலரப்போவது நிச்சயம் - துரோகக் &lt;br /&gt;&lt;br /&gt;                காங்கிரசை ஒழிப்பதே நம் லட்சியம்    (வெள்ளை) &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;                                          நன்றி : &lt;em&gt;&lt;strong&gt;புரட்ச்சிப்பெரியார் முழக்கம்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-5833581688434294523?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/5833581688434294523/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=5833581688434294523' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/5833581688434294523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/5833581688434294523'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2009/02/blog-post.html' title='வெள்ளைக்காரன் பெத்துப்போட்ட...'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-515286895945368172</id><published>2008-12-13T08:58:00.000-08:00</published><updated>2008-12-13T09:17:27.049-08:00</updated><title type='text'>துளிப்பா (அய்க்கூ) ப் போட்டி</title><content type='html'>&lt;strong&gt;சாதி, மதம், கடவுள், தீண்டாமை, சோதிடம், வாஸ்து- இவற்றிற்கெதிரான துளிப்பாக்களை அனுப்புங்கள்.&lt;/strong&gt;முதல் பரிசு உருவா 100, இரண்டாம் பரிசு உருவா 75, மூன்றாம் பரிசு உருவா 50 ( பரிசுகள் நூல்களாக.... )&lt;br /&gt;சிறந்த துளிப்பாக்கள் தெரிவு நாளைவிடியும் இதழிலும், நாளைவிடியும் வலைப்பதிவிலும் &lt;strong&gt;www.naalaividiyum.blogspot.com&lt;/strong&gt; வெளியிடப்படும். ஒருவரே எத்தனை துளிப்பாக்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். அனுப்பக் கடைசி நாள் 31.01.2009&lt;br /&gt;முகவரி:&lt;br /&gt;நாளைவிடியும்&lt;br /&gt;7-ஆ , எறும்பீசுவரர் நகர்&lt;br /&gt;மலைக்கோயில் தெற்கு&lt;br /&gt;திருவெறும்பூர், திருச்சி 620013&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-515286895945368172?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/515286895945368172/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=515286895945368172' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/515286895945368172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/515286895945368172'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2008/12/blog-post_13.html' title='துளிப்பா (அய்க்கூ) ப் போட்டி'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-5248912244204331962</id><published>2008-12-13T08:46:00.000-08:00</published><updated>2008-12-13T08:58:00.977-08:00</updated><title type='text'>மனமகன் தேவை</title><content type='html'>&lt;strong&gt;தனித்தமிழ், பகுத்தறிவு, பொதுவுடைமைச் சிந்தனையாளரான, அரசுப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிவரும் 29 அகவையான பெண்ணுக்கு,மேற்படி சிந்தனையுள்ள- அரசுப் பணியிலுள்ள மணமகன் தேவை.கல்வி......:க.மு; கல்.இ; ஆய்வு நிறைஞர்.(M.A;B.Ed;M.Phil)&lt;br /&gt;தொடர்புக்கு: 97888 06016&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-5248912244204331962?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/5248912244204331962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=5248912244204331962' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/5248912244204331962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/5248912244204331962'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2008/12/blog-post.html' title='மனமகன் தேவை'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-399076909007628465</id><published>2008-06-24T10:30:00.000-07:00</published><updated>2008-06-24T11:31:14.573-07:00</updated><title type='text'>பெரியாரின் எழுத்தும் பேச்சும்- குடியரசு முன் பதிவுத்திட்டம்</title><content type='html'>செப்தம்பர் 17 இல் 27 தொகுதிகள் வெளிவரவிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெயரளவுக்கு மட்டுமே பெரியாரின் பெயரை உச்சரிப்பவர்கள்- கழக ஆட்சிகள் செய்யத்தவறிய இப்பெரும் பணியை, பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுத்திருக்கிறது. பெரியாரை நிலை நிறுத்த- அவரின் சிந்தனைகளை ஆவணப்படுத்தும் அரிய முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;காரல்மார்க்சு, காந்தி, அம்பேத்கர் போன்றோருக்கு இருப்பதைப்போல காலவரிசைத்தொகுப்பு நூல்   ( collected works)பெரியாருக்கு இல்லையே என்ற பெருங்கவலை இனி இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;1925 முதல் 1938 வரை வெளிவந்த குடியரசு இதழ்கள் முழுமையும் தொகுக்கப்பெற்று 27 தொகுதிகளாக ( ஒவ்வொன்றும் 400 பக்கங்களுக்கு மேல்) செப். 17 இல் வெளியிடப்பெறவிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; ரூ 5400  விலையுள்ள இத்தொகுதிகள் முன்பதிவுத்  திட்டத்தின் கீழ்    ரூ 3500 க்கே உங்களுக்குக் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;தொகை அனுப்பக் கடைசி நாள்  31.08.2008&lt;br /&gt;&lt;br /&gt;பணவிடையாகவோ ( M.O) வரைவோலையாகவோ(Draft ) மட்டுமே அனுப்புங்கள்.&lt;br /&gt;காசோலை ( Cheque)அனுப்ப வேண்டாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;T.S.MANI என்ற பெயரில் வரைவோலை எடுக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;அனுப்ப வேண்டிய முகவரி&lt;br /&gt;&lt;br /&gt;தா. செ. மணி&lt;br /&gt;பெரியார் படிப்பகம்&lt;br /&gt;மேட்டூர் அணை 1 &lt;br /&gt;சேலம் மாவட்டம் - 636 401&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-399076909007628465?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/399076909007628465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=399076909007628465' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/399076909007628465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/399076909007628465'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2008/06/blog-post.html' title='பெரியாரின் எழுத்தும் பேச்சும்- குடியரசு முன் பதிவுத்திட்டம்'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-4698223804910023928</id><published>2008-05-12T20:06:00.000-07:00</published><updated>2008-05-12T20:07:10.719-07:00</updated><title type='text'>சாதிமறுப்பு, புரோகித மறுப்புத்திருமணம்</title><content type='html'>தோழர்கள் சுகுணாதிவாகர்- மு. இரா. செயந்தி ஆகியோரின் சாதி மறுப்பு, சடங்குகள் மறுப்பு, புரோகித மறுப்புத்திருமணம்&lt;br /&gt;11.05.2008 ஞாயிற்றுக்கிழமை அன்று திண்டுக்கல் விசுவகர்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.&lt;br /&gt;பேராசிரியர் தோழர் அ. மார்க்சு தலைமையேற்று நடத்திவைத்த&lt;br /&gt;இத்திருமண நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி,  இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (  மார்க்சிஸ்ட் ) யைச்சார்ந்த திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி மற்றும் பலர் வாழ்த்துரைத்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-4698223804910023928?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/4698223804910023928/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=4698223804910023928' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/4698223804910023928'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/4698223804910023928'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2008/05/blog-post_12.html' title='சாதிமறுப்பு, புரோகித மறுப்புத்திருமணம்'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-2205224773168206241</id><published>2008-05-09T09:12:00.000-07:00</published><updated>2008-05-09T10:23:54.949-07:00</updated><title type='text'>பின்பற்றத்தக்க முன்மாதிரிகள்</title><content type='html'>சில நாட்களுக்கு முன் என் நன்பர் ஒருவர் ஒரு மடல் எழுதியிருந்தார். அதில், 2008-ஆம் ஆண்டு சனவரித்திங்கள் முதல் ஒவ்வொரு திங்களும் தமிழ்நாட்டிலுள்ள தாய்த்தமிழ்ப பள்ளிகளுக்கு தன்னாலியன்ற சிறு தொகையினை அனுப்பி வருவதாக எழுதியிருந்தார். அவருக்கு நம்முடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவரைப் பின்பற்றி நாமும் இது போல் செய்யலாமே !&lt;br /&gt;நன்கொடைப்பட்டியல்&lt;br /&gt;&lt;br /&gt;பாவாணர் தமிழ்வழிப்பள்ளி                                     மார்ச்   உரூ  250 &lt;br /&gt;1, முதல் குறுக்குத்தெரு&lt;br /&gt;அட்டலெக்குமி நிழற்சாலை&lt;br /&gt;பள்ளிக்கரணை&lt;br /&gt;சென்னை- 601302&lt;br /&gt;&lt;br /&gt;தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி                                    மார்ச் உருவா 250&lt;br /&gt;தாய்த்தமிழ் மழலையர் தோட்டம்&lt;br /&gt;வெங்கடாபுரம் &lt;br /&gt;அம்பத்தூர்&lt;br /&gt;சென்னை 600 053&lt;br /&gt;&lt;br /&gt;தாய்த்தமிழ் மழலையர் &amp;                                  ஏப்பிரல் உருவா 250&lt;br /&gt;தொடக்கப்பள்ளி&lt;br /&gt;வள்ளலார் நகர் கிழக்கு&lt;br /&gt;திருப்பூர் 641 604&lt;br /&gt;&lt;br /&gt;தாய்த்தமிழ் மழலையர்                                        ஏப்பிரல் உருவா 250&lt;br /&gt;தொடக்கப்பள்ளி&lt;br /&gt;மூலக்கடை&lt;br /&gt;கெஞ்சனூர் ( அஞ்சல்)&lt;br /&gt;சத்தியமங்கலம்&lt;br /&gt;ஈரோடு-( மா)&lt;br /&gt;&lt;br /&gt;பாரதி தாய்த்தமிழ்ப்பள்ளி                                     ஏப்பிரல் உருவா 250&lt;br /&gt;1 ஆ- பிருந்தாவனம் தெரு&lt;br /&gt;சின்னக்காஞ்சிபுரம் - 631 501&lt;br /&gt;&lt;br /&gt;திருவள்ளுவர் மழலையர் பள்ளி                               ஏப்பிரல் உருவா 250&lt;br /&gt;5, -324 அவ்வையார் தெரு&lt;br /&gt;மேடவாக்கம் கூட்டுச்சாலை&lt;br /&gt;காந்திநகர்&lt;br /&gt;சென்னை 601 302&lt;br /&gt;&lt;br /&gt;தாய்த்தமிழ் மழலையர்                                          ஏப்பிரல் உருவா 250&lt;br /&gt;தொடக்கப்பள்ளி&lt;br /&gt;மடத்துக்குளம்&lt;br /&gt;உடுமலை (வ)- 642 113&lt;br /&gt;&lt;br /&gt;தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி                                 ஏப்பிரல் உருவா 250&lt;br /&gt;1, சம்பத் நகர்&lt;br /&gt;சூளேசுவரன்பட்டி&lt;br /&gt;பொள்ளாச்சி -6&lt;br /&gt;கோவை (மா)&lt;br /&gt;&lt;br /&gt;தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி                                 ஏப்பிரல் உருவா 250&lt;br /&gt;மாரியம்மன் கோயில் தெரு&lt;br /&gt;பாப்பாநாடு&lt;br /&gt;தஞ்சாவூர் ( மா.வ) - 614 626&lt;br /&gt;&lt;br /&gt;சக்தி தமிழ்ப்பள்ளி                                               ஏப்பிரல் உருவா 250&lt;br /&gt;தில்லை நகர் கிழக்கு&lt;br /&gt;தொழிற்பேட்டை&lt;br /&gt;கரூர் - 4&lt;br /&gt;&lt;br /&gt;திருவள்ளுவர் தாய்த்தமிழ்ப்பள்ளி                              ஏப்பிரல் உருவா 250&lt;br /&gt;238-1 சி, மங்கலம் பாதை&lt;br /&gt;பல்லடம்  - 641 664&lt;br /&gt;கோவை மா.வ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாய்த்தமிழ மழலையர்  மற்றும்                               மே      உருவா 250&lt;br /&gt;தொடக்கப்பள்ளி          &lt;br /&gt;தாய்த்தமிழ் வளாகம்&lt;br /&gt;67 அ, பவானி நெடுஞ்சாலை&lt;br /&gt;மாதையன் குட்டை&lt;br /&gt;மேட்டூர் அணை 636 452&lt;br /&gt;&lt;br /&gt;தாய்த்தமிழ்  மழலையர் &amp;                            சனவரி உருவா 1000&lt;br /&gt;தொடக்கப்பள்ளி&lt;br /&gt;கோவனூர் சாலை&lt;br /&gt;நாச்சியார் கோயில்&lt;br /&gt;கும்பகோணம் ( வ)&lt;br /&gt;தஞ்சாவூர் மா.வ -612 602&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாய்த்தமிழ்  மழலையர் &amp;                               மே     உருவா  250&lt;br /&gt;தொடக்கப்பள்ளி&lt;br /&gt;134, பாண்டியன் நகர்&lt;br /&gt;திருப்பூர் 641 602&lt;br /&gt;கோவை மா.வ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-2205224773168206241?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/2205224773168206241/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=2205224773168206241' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/2205224773168206241'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/2205224773168206241'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2008/05/blog-post_09.html' title='பின்பற்றத்தக்க முன்மாதிரிகள்'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-3410043016378125274</id><published>2008-05-07T10:34:00.000-07:00</published><updated>2008-05-07T10:36:22.704-07:00</updated><title type='text'>திருந்தாத கிழக்குப் பதிப்பகமும் திருத்துவதற்கு நீதிமன்றத்தில் வழக்கும்</title><content type='html'>திலீபன் &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற இதழில், தமிழக பதிப்பகத் துறையில் கார்ப்பரேட் தாதாவாக வளர்ந்து வரும் கிழக்கு பதிப்பகத்தின் நூல் தயாரிப்பு முறைகேடுகள் பற்றியும், தறிகெட்டு அலையும், அதன் மோசடி விதம் குறித்தும் எழுதி, அதன் ஒரு நூல் திருட்டை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியும் இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘முல்லைப் பெரியாறு சில உண்மைகள்' என் நூல் திருட்டை நாம் அம்பலப்படுத்தியது தமிழக பதிப்புத் துறையினரிடமும், அறிவார்ந்த வாசகர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பலரும் நமக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவ்வளவு கேவலப்பட்ட பின்னரும் ‘கிழக்கு பதிப்பகம்' சற்றும் கவலைப்படவில்லை. எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. குறைந்தபட்சம் தனது வருத்தத்தைக் கூட தெரிவிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கூச்ச நாச்சமின்றி அடுத்தவர் நூலை எடுத்து தனது பெயரை மாற்றி வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம் திருந்தும் என்ற நம்பிக்கை இனியும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே முல்லைப் பெரியாறு நதிநீர், பிரச்சினைகள்' நூலில் இளுமாநில அரசுகளின் ஒப்பந்தத்தை தமிழாக்கம் செய்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் எஸ்.நாகராஜன், தனது நூலை களவாடி நூல் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர்கள் மீதும், நூல் ஆசிரியர் மீதும் விரைவில் வழக்குத் தொடர இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து வழக்கறிஞர் எஸ்.நாக ராஜன் கூறுகையில், ‘ஒரு வழக்கறிஞரின் அறிவையே திருடும் கிழக்குப் பதிப்பகம் பணம் சம்பாதிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்று தெரிகிறது. ஆகவே அதன் மீது இன்னும் இரண்டொரு நாளில் வழக்குத் தொடர உள்ளேன் என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்குப் பதிப்பகம் இனியாவது திருந்துமா? தனது திருட்டை நிறுத்துமா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;   &lt;br /&gt;nandri   vizhippunarvu&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-3410043016378125274?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/3410043016378125274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=3410043016378125274' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/3410043016378125274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/3410043016378125274'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2008/05/blog-post.html' title='திருந்தாத கிழக்குப் பதிப்பகமும் திருத்துவதற்கு நீதிமன்றத்தில் வழக்கும்'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-312596529678015273</id><published>2008-04-25T10:43:00.000-07:00</published><updated>2008-04-25T10:44:32.142-07:00</updated><title type='text'>எது தமிழ்ப்புத்தாண்டு ?</title><content type='html'>நித்திரையில் இருக்கும் தமிழா!&lt;br /&gt;சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு&lt;br /&gt;அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே&lt;br /&gt;அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்&lt;br /&gt;தரணி ஆண்ட தமிழனுக்கு &lt;br /&gt;தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு&lt;br /&gt;                                                                                          -பாவேந்தர்பாரதிதாசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-312596529678015273?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/312596529678015273/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=312596529678015273' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/312596529678015273'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/312596529678015273'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2008/04/blog-post_25.html' title='எது தமிழ்ப்புத்தாண்டு ?'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-5746787400004600082</id><published>2008-04-25T10:08:00.000-07:00</published><updated>2008-04-25T10:18:41.315-07:00</updated><title type='text'>நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு... விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து...</title><content type='html'>-வே. மதிமாறன்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வரலாறை தன் விரும்பம் போல் கற்பனை செய்து சொல்லுகிற மோசடி அறிஞர்கள், தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் ஒரு குறிப்பிடதக்க அறிஞர்தான் இந்த ‘வாயாடி‘ நெல்லை கண்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாம் வகுப்பு பையன் அஞ்சு மார்க்குகாக செய்யுளை மனப்பாடம் பண்ணி மளமளன்னு ஒப்புக்கிறானே, அந்த மாதிரி ‘திறமை‘ உள்ளவர்தான் இந்த ஆளு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நல்லவரை விஜய் டீ.வி. ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு‘ என்கிற பேச்சுப் போட்டி நிகழ்ச்சிக்கு நடுவராக நியமிச்சிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தொலைக்காட்சிகளில் வருகிற நடன போட்டி, பேச்சுப் போட்டி, பட்டி மன்றம் போன்றவற்றில் ‘ஜட்ஜாக‘ வருகிற இந்தக் கோமாளிகள், தங்களை சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜு மாதிரி நினைச்சுக்கிட்டு, சவடால் விடறதும், கண்டிக்கிறதும், தனக்கு முன்பு பங்கேற்பாளர்கள் பணிவாக நடந்துக்கணும், எதிர்த்து பேசக்கூடாதுன்னு ‘பில்டப்‘ பண்ணுவதுமாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒரு ‘பில்டப் கட்டப்பஞ்சாயத்து‘ பாணி நடுவராதான் இந்த நெல்லை கண்ணன், 9-3-2008 அன்று காலை 9 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான, ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு‘ என்ற நிகழ்ச்சியிலே நடந்துகிட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, வெறும் பில்டப்போடு போயிருந்தா பரவாயில்லை, போய் தொலையட்டும்னு விட்டுருக்கலாம். ஆனால் வரலாறை கற்பனையாவும், பாரதி கவிதையை திரிச்சி தன் இஷ்டம்போல் பயன்படுத்தி பங்கேற்ற ஒரு பகுத்தறிவாளரான ஒரு இளைஞரை அவமானப்படுத்தியதை பார்த்த பிறகும் நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;பிரசன்னா என்ற ஒரு இளைஞர், ‘வல்லமை தாராயோ,- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?’ என்ற பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டி, “பாரதி வேண்டுமானால் கடவுளை நம்பி பாட்டுப் பாடலாம், ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை“ என்ற அர்த்தப்படும்படி தன் பேச்சின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே நம்ம ‘மெம்மரி பிளஸ்‘ நெல்லை கண்ணன்,“பிரசன்னா, பாரதி அந்தக் கவிதையை அப்படி பாடவில்லை. மாகாளி பராசக்தி உருசியநாட்டினிற் கடைகண் வைத்தா ளங்கே ஆகவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி, என்று பாடினான். அதில் பாரதி நமக்கு சொல்லுகிற செய்தி என்னவென்றால், இங்கே இருக்கிற பராசக்தி ருஷ்ய நாட்டிற்கு ஏன் கடைகண் திறந்தால் என்றால், முயற்சியோடு வழிபட வேண்டும். ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டு உன் முட்டாள் தனத்தால் வழிபட்டால் பராசக்தி உனக்கு நன்மை செய்யமாட்டாள்…” என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பிரசன்னா, “பாரதி ருஷ்ய புரட்சியை பற்றி பாடிக் கொள்ளட்டும் நான் அதை பற்றி சொல்லவில்லை” என்று பேச முயற்சித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே, ‘எண் கவனகம்‘ நெல்லை கண்ணனோ, “பிரசன்னா, நான் இருக்கும் இடத்தில் பாரதியை அவமானப்படுத்தி பேசுவதை அனுமதிக்க முடியாது. நான் முட்டாள் அல்ல.” என்று குதித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அருகில் இருந்த அறிவுமதி, “எதிர்த்து பேசக்கூடாது” என்று பிரசன்னாவை எச்சரித்தார்.அந்த இளைஞர் பேச அனுமதியில்லாமல் திருப்பி அனுப்ப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இதில் நெல்லை கண்ணன் செய்த மோசடிகளைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;மோசடி 1: பிரசன்னா என்கிற அந்த இளைஞர் மேற்கோள் காட்டிய ‘வல்லமை தாராயோ,- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?’ என்ற கவிதை, பக்திப் பாடல்கள் வரிசையில் 49 வது பாடலாக ‘கேட்பன‘ என்ற தலைப்பில் பாரதி எழுதிய ‘நல்லதோர் வீணை செய்தே-அதை நலம் கெடப் புழுதியி லெறிவ துண்டோ? சொல்லடி சிவசக்தி!’ என்ற பாடலில் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நெல்லை கண்ணன் குறிப்பிடுகிற பாடல், தேசபக்திப் பாடல்கள் வரிசையில் 52 வது பாடலாக ‘புதிய ருஷியர்-ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி‘ என்ற தலைப்பில் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரசன்னா சொன்னது சிவசக்தி. நெல்லை கண்ணன் போட்ட முடிச்சோ பராசக்தி.‘&lt;br /&gt;&lt;br /&gt;`என்னை முட்டாள் என்று நினைத்தீர்களா?’ என்று பிரசன்னாவிடம் ஆவேசப்பட்ட கண்ணன், ஒரு முட்டாளாகத்தான் நடந்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;மோசடி 2: அப்படி முட்டாள் தனமாக மாற்றி மேற்கோள் காட்டிய பாடலையும், திரித்து “ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டு உன் முட்டாள் தனத்தால் வழிபட்டால் பராசக்தி உனக்கு நன்மை செய்யமாட்டாள்…” என்கிறார் இந்த சைவப்பிள்ளை கண்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் பிள்ளைமார்களும் பார்ப்பனர்களும் சங்கமிக்கிற இடம். அந்த இடத்தில்தான் பாரதியோடு சங்கமிக்கிறார் நெல்லை கண்ணன். சிறு தெய்வ வழிபாட்டு முறையை பார்ப்பன மற்றும் உயர் ஜாதி மயமாக்குதல்.&lt;br /&gt;&lt;br /&gt;மோசடி 3: “நான் இருக்கும் இடத்தில் பாரதியை அவமானப்படுத்தி பேசுவதை அனுமதிக்க முடியாது. நான் முட்டாள் அல்ல.” என்று ஒரு அப்பாவி இளைஞனிடம் வீராப்பு காட்டுகிற கண்ணன், பாரதியை அம்பலப்படுத்தி நான் எழுதிய ‘பாரதி‘ ய ஜனதா பாரட்டி‘ என்ற புத்தகத்திற்கு பதில் சொல்ல வக்கற்று, காற்றில் கத்தி சுற்றுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;மோசடி 4:  “விரைவாக அழிந்து வருகிற மொழிகளில் தமிழும் ஒன்று. என்று கேள்விபட்டவுன் நான் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை“ என்று தமிழக்கு ஒரு அவமானம் ஏற்பட்டால், தன்னால் தாங்க முடியாது என்பது போன்ற ‘பெர்பாமன்ஸ்‘ தருகிறார் கண்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க சைவ சமயத்தின் உயிர் மூச்சான தேவாரம், திருவாசக்ததை சிதம்பரம் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி 2-3-2008 க்கு முன்னால போய் பாடியிருக்க வேண்டியதுதானே? பாடியிருந்தா, தீட்சிதனுங்க வாயிலேயே குத்தியிருப்பானுங்க.&lt;br /&gt;                                   www.mathimaran.wordpress.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-5746787400004600082?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/5746787400004600082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=5746787400004600082' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/5746787400004600082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/5746787400004600082'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2008/04/blog-post.html' title='நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு... விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து...'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-5907561198312120231</id><published>2008-04-22T11:18:00.000-07:00</published><updated>2008-04-25T11:43:40.755-07:00</updated><title type='text'>தீண்டாமை</title><content type='html'>இடி அல்லது இடிப்போம்...: ஆதவன் தீட்சண்யா&lt;br /&gt;&lt;br /&gt;நாய் பன்னி&lt;br /&gt;ஆடு மாடு எருமை கழுதை&lt;br /&gt;கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள்&lt;br /&gt;எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று&lt;br /&gt;என்னிடம் புகாரேதும் இல்லை&lt;br /&gt;இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே எழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட காலம் கி.பி.1990.&lt;br /&gt;&lt;br /&gt;ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;1. தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை&lt;br /&gt;&lt;br /&gt;3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)&lt;br /&gt;&lt;br /&gt;4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும். சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).&lt;br /&gt;&lt;br /&gt;18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-5907561198312120231?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/5907561198312120231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=5907561198312120231' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/5907561198312120231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/5907561198312120231'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2008/04/untouchability.html' title='தீண்டாமை'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-3307300113407207600</id><published>2007-12-29T08:05:00.000-08:00</published><updated>2007-12-29T09:15:06.659-08:00</updated><title type='text'>மலையாளியின் இன உணர்வும் தமிழனின் நலக்கேடும்</title><content type='html'>பெரியாற்றின் வடிமுகப் பரப்பில் தமிழ்நாட்டிலும் சில பகுதிகள் உள்ளன. இந்தப் பரப்பளவு 114 சதுர கி.மீ. - அதாவது மொத்தப் பரப்பளவில் 20% .&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவில் 88.90 விழுக்காடு தமிழகத்தின் எல்லைக்குள் பெய்யும் மழை. &lt;br /&gt;&lt;br /&gt;பெரியாற்றில் கேரள அரசு கட்டியுள்ள அணைகளின் எண்ணிக்கை 16. இந்த அனைத்து அணைகளின் நீரில் தமிழ்நாடு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது 9% மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;மீன் பிடிக்கும் உரிமையையும் சுற்றுலா உரிமையையும் கேரளத்திற்கு தமிழ்நாடு விட்டுக் கொடத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் , தமிழ்நாட்டிற்கு ஒவ்வோராண்டும் ஏற்படும் இழப்பு 300 கோடி ரூபாய் .இந்த வருமானம் முழுக்க கேரளாவிற்குத்தான் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாறு அணை கட்டப்படாமல் இருந்திருந்தால் , தமிழ்நாடு  மேற்கூறிய உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் இத்தொகை கேரளத்திற்குக் கிடைத்திருக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;152 அடி உயரத்திலிருந்து 136 அடியாகக் குறைக்க கேரள அரசு பிடிவாதமாக வற்புறுத்தியதால் , நடுவணரசு நீர்ப்பாசனத்துறை தலையிட்டு அணையைப் பலப்படுத்தும் வேலைகள் முடியும் வரை குறைத்திட உத்தரவிட்டது. பலப்படுத்திய பின்னும் இந்நிலை தான் தொடர்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் பாதிக்க்கப்படும் 5 மாவட்டங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், &lt;br /&gt;&lt;br /&gt;தரிசாக மாறிய நிலம்           :  38,000 ஏக்கர்&lt;br /&gt;இரண்டு போகத்திலிருந்து&lt;br /&gt;ஒரு போகத்திற்கு மாறிய நிலம்    : 86,000 ஏக்கர்&lt;br /&gt;ஆற்றுப்பாசனம் இழந்து &lt;br /&gt;ஆழ்குழாய்க்குத் தள்ளப்பட்ட நிலம் : 53,000 ஏக்கர்&lt;br /&gt;மொத்தம்          : 1,37,000 ஏக்கர்  &lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவாக , ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு இழப்பு 130.80 கோடி ரூபாய் &lt;br /&gt;28 ஆண்டுக்கால  மொத்த இழப்பு       3662.40 கோடி ரூபாய்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;strong&gt;பழ. நெடுமாறன் தினமணியில் எழுதிய , பெரியாறு அணையா? தேசிய ஒருமைப்பாடா? என்ற கட்டுரையிலிருந்து......&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தகவல்: &lt;em&gt;&lt;em&gt;&lt;strong&gt;சிதம்பரன்.கி,&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/em&gt; ஈரோடை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-3307300113407207600?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/3307300113407207600/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=3307300113407207600' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/3307300113407207600'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/3307300113407207600'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2007/12/blog-post_29.html' title='மலையாளியின் இன உணர்வும் தமிழனின் நலக்கேடும்'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-713857378047795173</id><published>2007-12-19T05:57:00.000-08:00</published><updated>2007-12-19T06:10:41.246-08:00</updated><title type='text'>ஒடுக்குகிறவர்களிடம் தாக்குதல் நடத்திய பெரியார்</title><content type='html'>&lt;em&gt;&lt;strong&gt;நீங்கள் தொடர்ந்து பெரியாரை முன்னிறுத்தி எழுதுகிறீர்கள். சாதி ஒழிப்பில் அவரின் பங்களிப்பு மிக முக்கியம் என்பது தான் காரணமா அல்லது அவர் கொண்டாடப்பட வேண்டிய மிக முக்கியமான ஆளுமை என்று நீங்கள் கருதுகிறீர்களா?&lt;/strong&gt;&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இடஒதுக்கீடு, நாத்திகம் போன்றவற்றுக்காக பெரியாரைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள், அவரை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். பெரியார் கடவுளை மறுத்ததால் மட்டும் தான் ஆதிக்க சாதிக்காரர்கள் அவரை விமர்சிக்கிறார்களா என்றால் இல்லை. அவர்களிலும் கடவுள் மறுப்பாளர்கள் இருக்கிறார்கள். ‘இந்திய சமூகம் சமத்துவமின்மையின் மீது கட்டப்பட்டிருக்கிறது’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். அதே அலைவரிசையில் தான் பெரியாரும் செயல்பட்டார். அதுதான் ஆதிக்க சாதியினரின் விமர்சனத்திற்குக் காரணம்.ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள், இயக்கங்கள் எல்லாமே ஒடுக்கப்பட்டவர்களிடம் மட்டும்தான் பேசின. ஆனால் ஒடுக்குகிறவர்களிடமே தாக்குதல் நடத்தியவர் பெரியார் ஒருவர்தான். கஷ்டப்படுபவனை பார்த்து நீ கஷ்டப்படுகிறாய் என்பதும், அதை அவன் ஏற்றுக்கொள்வதும் மிக இயல்பானது. ஆனால் ஒடுக்குகிறவனைப் பார்த்து, ‘நீ அவனை ஒடுக்குகிறாய்’ என்று சொல்லும் தைரியம் பெரியாருக்கு மட்டும்தான் இருந்தது.ஒடுக்குமுறைகளின் அடிப்படைகளைக் கண்டறிந்து அதை நீக்குவது தான் மார்க்சிய தத்துவம். இந்தியாவில் ஒடுக்குமுறையின் அடிப்படையாக சாதியம் இருக்கிறது. அந்த அடிப்படைகளின் மீது கைவைக்கிற நிகழ்வாக பெரியாரின் பேச்சும் செயல்பாடும் இருந்தது. சாதி ஒழிப்பு என்பதிலும், வருணாசிரம எதிர்ப்பு என்பதிலும் பெரியார் அம்பேத்கரோடு ஒன்றுபட்டார். இந்த விஷயங்கள் தான் அவர்களுக்குள் தொடர்பு ஏற்படக் காரணமாக இருந்தது.பெரியாரை ஆதரிப்பதற்கும், அவரை முன்னோடியாக நிறுத்துவதற்கும் பல்வேறு காரணங்களை சொல்லலாம். அதில் சிலவற்றையாவது வாசிப்பின் வழியாகத் தெரிந்து கொண்டதால் அவரை முழுவதுமாக ஆதரித்துப் பேசுகிறேன். அதனால் அவரை நான் என் முன்னோடியாகவும் கருதுகிறேன். பெரியார் மீது சில இடங்களில் இடதுசாரிகளுக்கு விமர்சனம் உண்டு. அதற்காக அவர்கள் பெரியாரை எந்த இடத்திலும் நிராகரிக்கவேயில்லை.வகுப்புவாதப் பிரச்சனைகள் தலைதூக்கும்போது நாம் போராட்டங்களை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கட்டம் வரைக்கும் பெரியார் நடத்தியிருக்கிறார். அதன் தொடர்ச்சியைத்தான் நாம் மேற்கொண்டாக வேண்டும். கேரளாவில் நாராயணகுருவை உள்வாங்கிக் கொண்டு இடதுசாரிகள் செயல்படுவதுபோல் தமிழ்நாட்டிலும் பெரியாரை உள்வாங்கிக் கொண்டு செயல்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;em&gt;&lt;em&gt;&lt;strong&gt;பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றும், பெரியார் ஒரு பிள்ளையார் சிலையை உடைக்கப்போய் தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள் வந்துவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்களே, உண்மையா?&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையார் சிலையை பெரியார் உடைத்ததை அந்தக் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, சிலையை பெரியார் உடைத்ததற்கான சமூகக் காரணத்தைத்தான் விளக்கவேண்டுமே தவிர பெரியாரை அல்ல. மூடநம்பிக்கை கரைபுரண்டோடி, மொத்த சமூகத்தையும் அடித்துப் புரட்டுகிறபோது, அதைத் தடுத்த நிறுத்த, கைக்கு கிடைத்ததையெல்லாம் பயன்படுத்துகிற பதற்றம் பெரியாருக்கிருந்தது.மக்களிடம் மூடநம்பிக்கை எந்த மட்டத்தில் இருக்கிறதோ அந்த மட்டத்தில் போய் பெரியார் அதை மறுத்துக் காட்டினார். ‘கடவுளுக்கு எல்லாவற்றையும் காப்பாற்றும் சக்தி இருக்கிறதென்றால், நான் கடவுளை உடைக்கிறேன், முடிந்தால் அவர் அவரையாவது காப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று சொல்லும் விதமாகத் தான் பிள்ளையார் சிலையை உடைத்தார். ‘என்னை கடவுள் படைத்தார், அவர் தான் என் தலையெழுத்தை எழுதி என்னைக் காப்பாற்றுகிறார்’ என்ற மக்களின் நம்பிக்கையை உடைப்பதற்காகத் தான் அவர் அதைச் செய்தார்.எந்த ஒரு தத்துவமும் மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் கடவுள் என்கிற தத்துவம் மட்டும் மக்களை பயமுறுத்தி மூடனாக மாற்றுகிறது. எனவே அதிலிருந்து மக்களை மீட்பதற்கு தன்னாலான வழிகளை அவர் செய்தார். அதை வறட்டு நாத்திகவாதம் என்று ஒதுக்கிவிட முடியாது. தெருவுக்குத்தெரு பிள்ளையார் வைத்தவர்கள் யார்? ஏற்கனவே பிள்ளையாரை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள்தானே? பெரியார் செயல்பாட்டில் கடுப்பாகிப் போய் எந்த நாத்திகனும் ஆத்திகனாகிவிடவில்லையே? பெரியாரே சொல்வதுபோல், வேறெவரும் இந்தக் காரியங்களை செய்வதற்கு முன்வராததால்தானே அவர் செய்ய வேண்டியதாயிருந்தது?பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றே வைத்துக்கொள்வோம். அதை நிராகரித்துவிட்டு விஞ்ஞானப்பூர்வமான நாத்திகத்தை மக்களிடம் பரப்புவதை யார் தடுத்தார்கள்? ஒவ்வொரு அரசாங்க அலுவலகமும் இந்துமதத்தினருக்கு மட்டுமேயானது மாதிரி பூசை, புனஸ்காரங்கள் அங்கே நடக்கிறது. இந்துக்கடவுள்களின் விக்கிரகங்களும் சிலைகளும் இல்லாத அலுவலகமே கிடையாது. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நடக்கிறது. அங்கிருக்கிற தொழிற்சங்கங்கள் உணர்வுமட்டம் தாழ்ந்துபோய் இதிலெல்லாம் பங்கெடுப்பதாய் மாறிவரும் கொடுமை நடக்கிறது. மத உணர்வுகள் பாதிக்கப்படும்னு சொல்லி எந்த இடத்திலும் நாம் நாத்திகம் பேசுவதில்லை, பகுத்தறிவு பற்றியும் பேசுவதில்லை, விஞ்ஞானக் கண்ணோட்டத்தை வலியுறுத்துவதில்லை. இப்போது யோசித்துப் பாருங்கள், பெரியார் செய்தளவுக்கு நாம் ஏதாவது செய்திருக்கிறோமா என்று&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;கீற்று இணையதளத்தில் திரு.ஆதவன்தீட்சண்யா அளித்த நேர்காணலின் ஒரு பகுதி.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-713857378047795173?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/713857378047795173/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=713857378047795173' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/713857378047795173'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/713857378047795173'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2007/12/blog-post_19.html' title='ஒடுக்குகிறவர்களிடம் தாக்குதல் நடத்திய பெரியார்'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-8145572334599715475</id><published>2007-12-16T03:16:00.000-08:00</published><updated>2007-12-16T03:29:46.156-08:00</updated><title type='text'>அவர் எங்கள் வேர்_   நா.இராசாரகுநாதன்</title><content type='html'>ஈரோட்டில் &lt;br /&gt;முளைவிட்டு &lt;br /&gt;பாரெட்டும் படர்ந்த &lt;br /&gt;பகல் நீ ! &lt;br /&gt;&lt;br /&gt;ஆதிக்க அம்மிகள் &lt;br /&gt;பறந்தன &lt;br /&gt;உன் ஆடைக்காற்றில்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னால் &lt;br /&gt;பாமரக் குடிசைகள் &lt;br /&gt;பகுத்தறிவுக் குடில்களாயின &lt;br /&gt;&lt;br /&gt;அவமரியாதைச் சேற்றில் &lt;br /&gt;அழுந்திய பெண்களை &lt;br /&gt;சுயமரியாதைக் கைகொடுத்து &lt;br /&gt;உயர்த்தினாய் நீ !&lt;br /&gt;&lt;br /&gt;நீ &lt;br /&gt;வளர்த்த முல்லைகள் &lt;br /&gt;" மஞ்சளாய்" நிறம்மாறினும்&lt;br /&gt;உன் மூலவேரில் &lt;br /&gt;மீண்டும்  மீண்டும் &lt;br /&gt;முளைக்கும் &lt;br /&gt;எங்கள் தலைமுறைகளுக்கான&lt;br /&gt;தளிர்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-8145572334599715475?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/8145572334599715475/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=8145572334599715475' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/8145572334599715475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/8145572334599715475'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2007/12/blog-post_16.html' title='அவர் எங்கள் வேர்_   நா.இராசாரகுநாதன்'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-4950910000950182092</id><published>2007-12-16T02:45:00.000-08:00</published><updated>2007-12-18T04:36:35.431-08:00</updated><title type='text'>ஸ்டாலினும் பெரியாரும் -    வே மதிமாறன்</title><content type='html'>‘உன் மதமா? என் மதமா? என்று உலகம் முழுக்க யூத, கிறித்துவ, இஸ்லாமிய, இந்து மதவாதிகள் முறுக்கிக் கொண்டு நின்றாலும், இவர்கள் சங்கமிக்கிற இடம் ஒன்று உண்டு. அது , கம்யூனிச எதிர்ப்பு. அதிலும் குறிப்பாக ஸ்டாலின் எதிர்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt; அறிவு ஜீவிகள், மார்க்சியத்தின் பின்னணியில் சிந்திப்பதாக சொல்லிக் கொள்ளும் அறிவுஜீவிகள், கதை மேதைகள், கட்டுரையிலேயே கதை விடுபவர்கள், இன்னும் இலக்கியப் போர்வையோடு வரும் இந்து மத வெறியர்கள் &amp; இவர்கள் ஒருவர் மீது ஒருவர் வார்த்தைச் சேறுகளை வாரி அடித்துக் கொண்டாலும், இவர்கள் ஒன்றுபடுகிற இடம் ஒன்று உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt; அது, ஸ்டாலின் எதிர்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt; ”ஸ்டாலின் ஒரு கொலைகாரன்”&lt;br /&gt;&lt;br /&gt; "ஸ்டாலின் மக்கள் விரோதி”&lt;br /&gt;&lt;br /&gt; ”ஸ்டாலின் ஆட்சியில் சுதந்திரம் என்று பேச்சுக்கே இடம் கிடையாது.”&lt;br /&gt;&lt;br /&gt; ”ஸ்டாலின் ஆட்சி இரும்புத் திரை” என்றெல்லாம் இவர்களால் அவதூறு பரப்பப்படுகிற தலைவர் ஸ்டாலின் ஆட்சியை நேரில் கண்ட சாட்சியாக தலைவர் பெரியார். &lt;br /&gt;&lt;br /&gt; ஒடுக்கு முறைகளுக்குத் தாய்வீடாக இருக்கும் சிறைச்சாலை, ஸ்டாலின் ஆட்சியில் கைதிகளுக்கு வீடாகவும் தொழிற்சாலையாகவும் பயன்பட்டது என்று அந்த இரும்புத் திரையை விலக்கிக் காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். அமெரிக்கா போன்ற முதலாளித்துவ ஜனநாயக நாடுகளில், சாதாரண குடிமகனுக்கு உள்ள சுதந்திரத்தை விட , சோவியத் நாட்டில் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான சோசலிச குடியரசில், கைதிகள் கூட எவ்வளவு சுதந்திரமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சாட்சியளிக்கிறார் தலைவர் பெரியார்.&lt;br /&gt;&lt;br /&gt;                                                                     &lt;em&gt;&lt;strong&gt;"பெரியாரின் அயல் நாட்டுப் பயணக் குறிப்புகள்&lt;/strong&gt;&lt;/em&gt;‘ என்ற நூலில், தந்தை பெரியார் அவர்கள் கைப்பட எழுதியது:‘Leaforthov‘ ஜெயில் பார்க்க அழைக்கப்பட்டுப் போனோம். டைரக்டர் அறிமுகம் செய்யப்பட்டு அவர் எல்லாம் காட்டினார். மே First க்கு ஆக ஜெயில் அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். கைதிகளுக்கு எவ்வித அடையாளமும் இல்லை. ஜெயில் என்பது பல பேக்டடரிகள் இருக்கிறது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பனீன், மொப்ளர் பின்னல் நெசவு பார்த்தோம். டைமன் பட்டில் நல்ல வேலைகள் செய்யப்படுகிறது. மற்றும் கோட்டுகள், ஓவர் கோட்டுகள் முதலியவை செய்யப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; சிறைக்கூட அறைகள் பார்த்தோம்; கட்டில் மேஜை நாற்காலி, கம்மோட், தண்ணீர்க் குழாய், பேசின், உஷ்ணம், புஸ்த்தகங்கள் அலமாரி ரேடியோ முதலியவைகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு ரூமுக்கு 2 அல்லது மூன்று பேர் உண்டு. ஒரு ரூம் 816 அளவு. அவர்களுக்கு க்ஷவரம் செய்யும் சலூன் உண்டு. சையன்சு அறை உண்டு. பத்திரிகைகள் படிக்கும் ரீடிங் ரூம், புஸ்த்தகங்கள் படிக்கும் லைபெரிரி, படிப்புச் சொல்லிக் கொடுக்கும் வகுப்புகள், சித்திர வேலை கற்பித்தல் முதலியவை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt; இங்கு டிராமா, சினிமா ஆல்கள் பார்த்தோம். 17 வயது பையன் ஒருவன் பல திருட்டில் அகப்பட்டு 3 1/2  ஆண்டு தண்டனை அடைந்தவனைப் பார்த்து விசாரித்தோம். அவன் 2 ஆண்டு இங்கு இருந்து வேலை பழகி பிறகு தனி பேக்ட்டரிக்கு அனுப்பப்படுவான். இப்போது நெசவு வேலை செய்கிறான். இந்த ஜெயிலில் 600 கைதிகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt; இதை மாதிரி 4 அடுக்கு கட்டடம். இது புரக்ஷிக்கு முன் கட்டப்பட்ட ஜெயில் கட்டடம். சில திருத்தப்பாடு செய்திருக்கிறது. ஆனால், புது ஜெயில்கள் இன்னமும் நன்றாய்க் கட்டப்படுகின்றன. முன் ஒரு அறைக்கு ஒரே கைதி, இவன் எப்போதும் உள்ளேயே இருப்பான். &lt;br /&gt;&lt;br /&gt; முன்னால் இங்கு சர்ச்சு இருந்தது. இப்போது அது ஆஸ்பத்திரியாய் இருக்கிறது. ராத்திரி காலத்தில் கைதி சிறைக்குள் இருப்பான். அதுவும் இரவு 12 முதல் 5 மணிவரைதான் இருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு கைதி 8 மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டும்; அவர்களுக்கு சாப்பாடு துணி முதலியவை இல்லாமல் ஒரு கைதிக்கு மீ 30 ரூபிள் சம்பளம் உண்டு. அதில் பகுதியை அவன் இஷ்டப்படி செலவு செய்யலாம். அதாவது, இங்கு கடையில் அவனுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். மீதி மீ 15 ரூபிள் வீதம் சேர்த்து வைத்து விடுதலை ஆகிப் போகும் போது கையில் கொண்டு போவான். அவர்களுக்கு அடிக்கடி மீட்டிங்குகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt; தொழில் விஷயமான பிரசங்கம், சோஷியலிஸ்ட் பிரசங்கம் செய்வார்கள். 3 மணி நேரம் படிக்கலாம். 6 நாளில் 1 நாள் லீவு. 7 நாள், சிலர் 14 நாள் அவர்கள் வீட்டிற்குப் போய் வரலாம். குடியானவன் கைதி, கூட்டுப் பண்ணையத்துக்காரன் வருடத்தில் மூன்று மீ வீட்டுக்கு வேலைக்குப் போய்வரலாம். தினமும் தாராளமாய் வீட்டுக்குக் கடிதம் எழுதலாம்; பதில் பெறலாம். பத்திரிகை, புஸ்தகம் தாராளமாய்ப் பெறலாம். &lt;br /&gt;&lt;br /&gt; சாப்பாடு 2 வேளை; காலை 11 மணிக்கும் மாலை 6 மணிக்கும் சாப்பாடு டீ வேண்டியது Free யாய் வேண்டிய வரை கிடைக்கும். தொழில்சாலை உடை தவிர மற்ற உடை அவர்கள் சொந்தத்தில் இஷ்டப்படி உடுத்திக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; மே First க்கு 100 பேர்களை ஒரு நாள் எல்லாம் வெளியில் போய் வர அனுமதிப்பார்கள். கைதிகளுக்கு என்று தனிப்பத்திரிகை உண்டு. அது மீ 3 முறை 5   கோபக் விலை. லைபெரிரியில் 8000 எட்டு ஆயிரம் புஸ்த்தகங்கள் இருக்கின்றன. எல்லாப் பத்திரிகைகளும் வருகின்றன. 100க்கு 82 பேர்கள் ஜெயிலில் பத்திரிகைக்கு சந்தாதாரர்கள். செஸ் முதலிய கேம் விளையாட்டுச் சாமான்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; இங்குள்ள கைதிகள் குற்றம் செய்தால் இங்கேயே கைதிகளுக்குள் எலக்ட் செய்த ‘காம்ரேட் கோர்ட் ‘டில் விசாரித்து நீதி செலுத்துவார்கள். அந்தத் தீர்ப்பு ஒப்புக் கொள்ளாவிட்டால், ஜெயில் அதிகாரிகள் 3 நாள் வரை மூடி வைத்திருக்கும் தண்டனை செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; 12 முதல் 5 வரைதான் ஜெயில் அறை பூட்டி இருக்கும். மற்ற காலங்களில் திறந்தே இருக்கும். பிரரேட் கோர்ட் தண்டனை என்பது குறிப்பிட்ட காலத்துக்கு சில சவுகரியங்கள் இல்லாமல் செய்வது. அவரவர்கள் நடவடிக்கைகளுக்கு ஒரு புஸ்த்தகம் உண்டு. இது போல் மாஸ்கோவில் 6 ஜெயில் இருக்கின்றன. மொத்தம் 4000 நாலாயிரம் கைதிகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt; பெண்களுக்குத் தனி ஜெயில் உண்டு. (சில கைதிகள் தங்கள் அறைக்குள் ஸ்ட்டவ் வைத்திருந்தார்கள். மே First க்கு தங்கள் தங்கள் அறையை அலங்கரித்துக் கொண்டும் இருந்தார்கள்) மாஸ்கோ ஜில்லா பூராவுக்கும் சுற்றுப்பக்க கிராமங்களும் சேர்ந்து 4000  கைதிகள். இந்த ஜெயிலில் இருந்து போகும் கைதிகள் நல்ல வேலைக்காரர்களாகி விடுகிறார்கள். ஜெயில் காரணத்தினால் ஓட்டுக்கு அருகதை போய்விடாது.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த டைரக்ட்டர், ரிவிலாஷனுக்கு முன் கொல்லு வேலை செய்து கொண்டிருந்தவர், ஜெயில் திருத்தமெல்லாம் அனேகமாய் இவருடைய முயற்சியிலேயே செய்யப்படுகிறது. இவர் பெயர் மவுலின். ரிவிலூஷனில் இவர் தண்டனை அடைந்து சைபேரியாவில் நாடு கடத்தி வைக்கப்பட்டிருந்தவர்; அரசியல் கைதியாயும் இருந்தவர். தான் போர்ட்சைட் வரை வந்திருப்பதாகச் சொன்னார். இவர் 29 வருடமாக கம்யூனிஸ்ட் பார்ட்டியில் இருந்து வேலை செய்தவர். இவர் ஓல்ட் போல்ஸ்விக் மெம்பர். 15000 தொழிலாளிகளின் ஸ்ட்ரைக்கை லீட் செய்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt; EVRகேழ்வி: ”இங்கு இவ்வளவு தாரளமாய்க் கைதிகள் விடப்படுகிறார்களே , ஓடிப் போவதில்லையா?”&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: ”இதிலிருந்து ஒரு தடவை 3 பேர் ஓடிப்போனார்கள். பிறகு தானாகவே வந்து விட்டார்கள். சில சமயங்களில் 100 பேர் 200 பேர் சர்க்கஸ் பார்க்க என்று விடப்படுவார்கள். அவர்கள் காவல் இல்லாமலேயே போய் விட்டுத் தாங்களாகவே திரும்பி வந்துவிடுவார்கள். காரணம், அவர்களது நல்ல, நடவடிக்கையும் மற்றும் வெளியில் அவர்களுக்கு டிக்கட் இல்லாமல் சுலபத்தில் சாப்பாட்டுச் சாமான், அறைகள் முதலியவை கிடைக்காததுமாகும்.”&lt;br /&gt;&lt;br /&gt; ரெவிலூஷன்போது இந்த டைரக்ட்டரின் பெண்ஜாதி குழந்தைகள் எதிரிகளால் (ஒயிட்ஸ்களால்) கொல்லப்பட்டுவிட்டார்கள். இவர் ஆக்ஷியில் இது உள்பட 4 ஜெயில்கள் மேற்பார்வையில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த 4 ஜெயிலில் இருந்து வருஷம் 1 க்கு 8 மிலியன் ரூபிள் மீதியாகிறது. 2300கைதிகளின் வேலையால் வருடம் 8000000 ரூபிள் சர்க்காருக்கு லாபம். அதாவது ஒரு கைதியால் மீ275 ரூபிள் மீதியாகிறது. கைதிகளுக்கு அதிகமான சுதந்திரமும் சவுகரியமும் உண்டு. நன்றாய் நடந்து கொள்ளுகின்றவர்களுக்கு அதிக சவுகரிமும் லாபமும் உண்டு“&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                                                                 -வே. மதிமாறன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                                      தலித் முரசில் 2001 சூனில் எழுதியது.&lt;br /&gt;&lt;br /&gt;«&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-4950910000950182092?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/4950910000950182092/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=4950910000950182092' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/4950910000950182092'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/4950910000950182092'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2007/12/blog-post_5289.html' title='ஸ்டாலினும் பெரியாரும் -    வே மதிமாறன்'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-7456635589846564232</id><published>2007-12-15T10:09:00.000-08:00</published><updated>2007-12-15T10:35:42.994-08:00</updated><title type='text'>ஃபிடல் காஸ்ட்ரோவின் உரைத்தொகுப்பு</title><content type='html'>கியூபா அதிபர் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ 1959 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை ஆற்றிய முக்கியமான உரைகள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. &lt;br /&gt;இத்தொகுப்பு 34 பேராசிரியர்கள் அடங்கிய குழுவினரின் பெருமுயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;கியூபாவின் தலைநகரான ஹவானாவில் இந்நிகழ்வு நடைபெற்றது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-7456635589846564232?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/7456635589846564232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=7456635589846564232' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/7456635589846564232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/7456635589846564232'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2007/12/blog-post_2516.html' title='ஃபிடல் காஸ்ட்ரோவின் உரைத்தொகுப்பு'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-3862892744627312221</id><published>2007-12-15T09:35:00.000-08:00</published><updated>2007-12-15T10:04:17.020-08:00</updated><title type='text'>கலையும் இலக்கியமும் யாருடைய நன்மைக்காக?</title><content type='html'>சுயமரியாதை இயக்கத்தார் மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து &lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்படுத்துகின்ற காலத்தில் அதற்குச் சரியான சமாதானம் சொல்ல &lt;br /&gt;&lt;br /&gt;யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள், தாங்கள் தப்பித்துக் &lt;br /&gt;&lt;br /&gt;கொள்வதற்காகப் பழைய கலைகள் என்னும் சாக்கின் பேரில் அதன் &lt;br /&gt;&lt;br /&gt;நிழலில் போய் மறைந்து கொண்டு, "சுயமரியாதை இயக்கத்தார் பழைய &lt;br /&gt;&lt;br /&gt;கலைகளை நாசம் செய்கின்றார்கள்' என்று பழி சுமத்துவதன் மூலமே &lt;br /&gt;&lt;br /&gt;அவைகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோயில்களைக் குற்றம் சொல்லி, அவற்றில் உள்ள விக்ரகங்களின் &lt;br /&gt;&lt;br /&gt;பாசங்களை எடுத்துக் காட்டி, இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான &lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும், இந்த பாசத்திற்காக &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பணச் செலவும், நேரச் செலவும் செய்யலாமா என்றும் &lt;br /&gt;&lt;br /&gt;கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்து கொண்டு "அவைகள் &lt;br /&gt;&lt;br /&gt;அவசியம் இருக்க வேண்டும்' என்றும் "அவைகள் அழிந்தால் இந்திய &lt;br /&gt;&lt;br /&gt;ஓவியக் கலை அழிந்துவிடும்' என்றும், "சாமி பக்திக்காகத் தாங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;கோயில்களைக் காப்பாற்றுவதில்லை' என்றும் "ஓவியக் கலை &lt;br /&gt;&lt;br /&gt;அறிவுக்காகக் கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்' என்றும் &lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது பண்டிதர்களின் ஓவியக் கலையும், காவியக் கலையும் போகின்ற &lt;br /&gt;&lt;br /&gt;போக்கைப் பார்த்தால், அவர்களுக்கு உள்ள பகுத்தறிவுக் கலை &lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவில் இருக்கின்றது என்பது ஒருவாறு தானாகவே விளங்கும். &lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கு ஓவியம் வேண்டுமானால், இந்தியக் கோயில் ஓவியமும், &lt;br /&gt;&lt;br /&gt;இந்துக் கடவுள்கள் ஓவியமும், கடுகளவு அறிவுள்ள மனிதனும் ஒப்ப &lt;br /&gt;&lt;br /&gt;முடியாத, மதிக்க முடியாத ஓவியங்கள் என்பதோடு, அவை மனிதத் &lt;br /&gt;&lt;br /&gt;தன்மையும், பகுத்தறிவும் உள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஓவியம் &lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்ல முடியாததான நிலையில் இருப்பதையும் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியெனில், இந்திய ஓவியம் என்பது இந்து மத சம்பந்தமான &lt;br /&gt;&lt;br /&gt;கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட &lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அரிது என்றே சொல்ல &lt;br /&gt;&lt;br /&gt;வேண்டும். அது மாத்திரமல்லாமல், அவைகளில் இயற்கைக்கு &lt;br /&gt;&lt;br /&gt;முரண்பட்டவையே 100 -க்கு&lt;br /&gt;99 - ஓவியங்கள் என்றும் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக மனிதனும், மிருகமும் புணர்வதும், மிருக முகத்துடன் &lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் இருப்பதும், மிருகங்கள் பறப்பதும், மிருகங்களின் மீது &lt;br /&gt;&lt;br /&gt;அளவுக்கு மீறின மக்கள் இருப்பதும், பட்சிகளின் மீது மக்கள் &lt;br /&gt;&lt;br /&gt;இருப்பதும், மக்கள் பறப்பதும்; 4 கைகளும் ஒன்று, இரண்டு, மூன்று, &lt;br /&gt;&lt;br /&gt;நான்கு, அய்ந்து, ஆறு முகங்களும்; சிறிய உருவத்தின் மீது பெரிய &lt;br /&gt;&lt;br /&gt;உருவங்கள் இருப்பதும், தாமரைப் பூவின் மீது ஒரு பெண் நிற்பதும், &lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் இதைவிட எத்தனையோ பொருத்தமற்ற, சாத்தியமற்றதான &lt;br /&gt;&lt;br /&gt;உருவங்களே இன்று ஓவியமாகக் கருதப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக, மேல் நாட்டு ஓவியங்களைப் பார்த்தால் இது ஓவியமா? &lt;br /&gt;&lt;br /&gt;உண்மைத் தோற்றமா? என்று மருளும்படியாகவும், அவைகளுடைய &lt;br /&gt;&lt;br /&gt;சாயல் முதலியவைகளிலிருந்தே குணம், காலம், இடம், நடவடிக்கை &lt;br /&gt;&lt;br /&gt;முதலியவைகள் தெரிந்து கொள்ளும்படியாகவும், அவைகள் &lt;br /&gt;&lt;br /&gt;பிரத்தியட்சமாக இயங்கிக் கொண்டிருப்பது போலவும், எவ்வளவோ &lt;br /&gt;&lt;br /&gt;அருமையான காரியங்கள் வெகு எளிதில் மிகச் சாதாரண தன்மையில் &lt;br /&gt;&lt;br /&gt;அறியும்படியாகவும், நாமே பார்த்த மாத்திரத்தில் சுலபத்தில் பழகிக் &lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளும்படியாகவும் இருப்பதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, அப்படிப்பட்ட அருமையான ஓவியங்களையும், &lt;br /&gt;&lt;br /&gt;சித்திரங்களையும், புதுமைகளையும் விட்டு விட்டு அநாகரிகமும், &lt;br /&gt;&lt;br /&gt;காட்டுமிராண்டித்தனமுமான, மிருகப் பிராயமும் கொண்டதான &lt;br /&gt;&lt;br /&gt;உருவங்களை வைத்துக் கொண்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் &lt;br /&gt;&lt;br /&gt;அவைகளுக்குப் பணம், காசு, நேரம் ஆகியவை செலவு செய்து, கீழே &lt;br /&gt;&lt;br /&gt;விழுந்து அவைகளிடம் பக்தியையும் காட்டிக் கொண்டு, "ஓவியக் &lt;br /&gt;&lt;br /&gt;கலைக்காக அக்கலையைக் காப்பாற்றுவதற்காக அவைகளிடம் இப்படிச் &lt;br /&gt;&lt;br /&gt;செய்கின்றோம்' என்றால், இது பகுத்தறிவும், யோக்கியக் குணமும் &lt;br /&gt;&lt;br /&gt;அடைந்த மனிதர் என்பவர்களின் செய்கையாகுமா? பேச்சாகுமா? என்று &lt;br /&gt;&lt;br /&gt;கேட்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் நாம் முக்கியமாய்க் குறிப்பிடுவது என்னவென்றால், நமது &lt;br /&gt;&lt;br /&gt;பண்டிதர்கள் என்பவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும், புத்தக &lt;br /&gt;&lt;br /&gt;வியாபாரத்திற்கும், வாழ்க்கை நிலைமைக்கும் இம்மாதிரிக் &lt;br /&gt;&lt;br /&gt;காட்டுமிராண்டித்தனமான, அநாகரிகமான காவியங்களும், &lt;br /&gt;&lt;br /&gt;ஓவியங்களுமல்லாமல் வேறுவகை ஒன்றில்லாமல் போனதால், அவர்கள் &lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை மோசமான பொய்யையும், புரட்டையும் வஞ்சகத்தையும் &lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிக் கொண்டு, இவைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் &lt;br /&gt;&lt;br /&gt;வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இம்மாதிரி பாசமும் அநாகரிகமுமான காவியமும், ஓவியமும் &lt;br /&gt;&lt;br /&gt;அழிக்கப்பட வேண்டுமானால், முதலாவதாக நமது பண்டிதர்கள் &lt;br /&gt;&lt;br /&gt;என்பவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு வாழ்க்கை நலத்திற்கு ஏதாவது &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழி கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டியது, பகுத்தறிவையும் &lt;br /&gt;&lt;br /&gt;நாகரிகத்தையும் விரும்பும் பொதுமக்கள் கடமையேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;('குடி அரசு' கட்டுரை 26.04.1931 )&lt;br /&gt;&lt;br /&gt;பாருங்கள் www.thamizachi.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-3862892744627312221?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/3862892744627312221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=3862892744627312221' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/3862892744627312221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/3862892744627312221'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2007/12/blog-post_9112.html' title='கலையும் இலக்கியமும் யாருடைய நன்மைக்காக?'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-6519673772051301763</id><published>2007-12-14T07:48:00.000-08:00</published><updated>2007-12-15T09:59:30.709-08:00</updated><title type='text'>இராமாயணம் கற்க!!!</title><content type='html'>&lt;em&gt;ஆதம்பாலமாஇராமர்பாலமா?&lt;/em&gt;,                                                                           - பேராசிரியர் எசு. ஆபிதீன்&lt;br /&gt;கீற்று வெளியீட்டகம்&lt;br /&gt; சிபா வளாகம் முதல் மாடி, &lt;br /&gt;142, வடக்கு வெளி வீதி, மதுரை 620 001&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-6519673772051301763?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/6519673772051301763/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=6519673772051301763' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/6519673772051301763'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/6519673772051301763'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2007/12/blog-post_14.html' title='இராமாயணம் கற்க!!!'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8854823744431408229.post-4579147614601335603</id><published>2007-12-11T10:45:00.000-08:00</published><updated>2007-12-14T08:53:43.154-08:00</updated><title type='text'>மாயைகளை உடைத்தெறிந்த வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை.......</title><content type='html'>தோழமையோடு அரசெழிலன் வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்குத் தெரிந்த செய்திகளை யாருக்கும் சொல்லாமல், அவற்றால் தான் மட்டுமே பயன் அடையும் ஒரு பிற்போக்குத் தனம் நம்மிடையே மிகப்பெரும்பாலோருக்கு உண்டு.&lt;br /&gt;இந்தத் தன்மையிலிருந்து மிகவும் மாறுபட்டு புதுச்சேரியில் சில தோழர்கள் இணைந்து &lt;strong&gt;புதுச்சேரி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வலைப்பதிவர் சிரகம்&lt;/strong&gt; என்ற அமைப்பினைத் தொடங்கி, கடந்த 09.12.2007 அன்று&lt;br /&gt;&lt;strong&gt;வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை &lt;/strong&gt;ஒன்றினைப் புதுச்சேரி சற்குரு உணவகக் கூட்ட அரங்கில் மிகமிகச் சிறப்பாக நடத்தினர். &lt;strong&gt;தோழர்கள் கோ. சுகுமாறன், இரா.சுகுமாறன், முனைவர் நா.இளங்கோ, முனைவர் மு. இளங்கோ &lt;/strong&gt; ஆகியோரின் முன் முயற்சியிலும் பெரு முயற்சியிலும் இக்கருத்தரங்கமும் பயிற்சிப்பட்டறையும் நடைபெற்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8854823744431408229-4579147614601335603?l=naalaividiyum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naalaividiyum.blogspot.com/feeds/4579147614601335603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8854823744431408229&amp;postID=4579147614601335603' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/4579147614601335603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8854823744431408229/posts/default/4579147614601335603'/><link rel='alternate' type='text/html' href='http://naalaividiyum.blogspot.com/2007/12/blog-post.html' title='மாயைகளை உடைத்தெறிந்த வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை.......'/><author><name>நாளை விடியும்</name><uri>http://www.blogger.com/profile/10001525431337006925</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry></feed>
